districts

img

சிபிஎம் கடலூர் மாவட்ட மாநாட்டில் போராளிகளுக்கு பாராட்டு

கடலூர் மாவட்ட மாநாட்டில் காவல் நிலைய அடக்கு முறைக்கு எதிராகவும், காவல் நிலைய சாவுக்கு எதிராகவும்,   துணிச்சலுடன் போராடிய களப் போராளிகளான முதனை ராஜா கண்ணுவின் மனைவி ஜெய் பீம் பார்வதி அம்மாள், அந்த சம்பவத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்த களப்போராளி முதனை கோவிந்தன், நெய்வேலி காவல் நிலையத்தில் படுகொலையான சுப்பிரமணி மனைவி ரேவதி, சிதம்பரம் அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட நந்தகோபால் மனைவி பத்மினி, கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் தாயார் ஆர்.செல்வி, ஆகியோரை கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலச்செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர் ஆகியோர் சால்வை அணிவித்து பாராட்டினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட 24 வது மாநாட்டையொட்டி பெண்ணாடத்தில் சனிக்கிழமையன்று (டிச.14) செங்கொடி பேரணி நடைபெற்றது. பெண்ணாடம் பேருந்து நிலையத்திலிருந்து துவங்கிய பேரணி மாநாட்டு அரங்கை வந்தடைந்தது.

மாநாட்டை துவக்கிவைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன் பேசினார்.