districts

சிபிஎம் மாநாட்டு கலை இலக்கியப் போட்டி: சிறந்த நாடகமாக ‘வெளிச்சப்பாடு’ தேர்வு

இ.கே.நாயனார் நகர் (கண்ணூர்), ஏப்.9- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23ஆவது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட குறுநாடகப் போட்டி மற்றும் பல்வேறு கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளியன்று (ஏப்.8) பரிசுகள் வழங்கப்பட்டன. கண்ணூர் டவுன் சதுக்கத்தில் உள்ள சி.எச்.கணாரன் நகரில் நடந்த கலாச்சார விழாவில் சாகித்ய அகாடமி தலைவர் சச்சிதானந்தனும், எழுத்தாளரும் சிபிஎம் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் எம்.பி., யும் பரிசுகளை வழங்கினர். மணியட் கோரஸ் கலைக்குழுவின் வெளிச்சப்பாடு சிறந்த நாடகத்துக்கான முதல் பரிசை பெற்றது. இரண்டாவது  பரிசு பரியாரம் நாடகக் குழுவைச் சேர்ந்த மல்லனும் மாதேவனும் என்கிற நாடகத்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக பிரதீப் மண்டூர் (மல்லனும் மாதேவனும்), சிறந்த நாடக எழுத்தாளராக அனில் நடக்காவு (வெளிச்சப்பாடு) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். சுரேஷ் பரியாரம் (மல்லனும் மாதேவனும்) சிறந்த நடிகர், கே விஸ்மயா (பூமிக்கு அடியில்) சிறந்த நடிகை. இலக்கியப் போட்டிகளில் கவிதை: 1. ஜீவன் ஜினேஷ் (இல்லாதவர்களின் புலம்பல்கள்) 2. கோபிகா கே பிரபா (பிடச்சில்), கதை: 1. சி.நாஷ (பார்சிலோனா), 2. அஷ்வின் சந்திரன் (அனந்தரம் கோர்ட் பிரியுந்நு), கட்டுரை: 1 அத்வைத் எம் பிரசாந்த் 2. கே ஸ்ரேயா.