districts

img

குறவன் பழங்குடியினர் வீடு மீது சாதி ஆதிக்க சக்திகள் தாக்குதல்

கிருஷ்ணகிரி,மே.11- ஊத்தங்கரை வட்டம் பாவக்கல் ஊராட்சி காந்தி நகரில் குறவன் பழங்குடி இனத்தைச் சேர்ந்த காந்தா சங்கர் குடும்பத்தினர் 60 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டப்பட்ட தங்கள் வீட்டில் குடும் பத்துடன் வசித்து வருகின்றனர். அருகில் மளிகை கடை நடத்தி வரும் ஊராட்சி துணைத் தலை வர் குணசேகரன் சாதி ஆதிக்க வன்மத்துடன் காந்தா சங்கர் குடும்பத்தினரிடம் பல ஆண்டு களாக தொடர்ந்து சண்டையிட்டு வருகிறார்.  இந்நிலையில் நடந்த 3 ஆம் தேதி காலை 10மணிக்கு   வயதான காந்தா மட்டும் வீட்டில் தனியாக இருக்கும்போது குணசேகரன் மற்றும் அவரது சகோதரர்கள் தன சேகரன் சென்னகிருஷ்ணன் அவர்க ளின் மனைவிகள் மல்லிகா, கிருஷ்ணவேணி, கலா ஆகியோர் காந்தாவை வீட்டை விட்டு வெளியே இழுத்து தள்ளி சேலையை கிழித்து அடித்து துரத்தியதுடன் அனை வரும் சேர்ந்து காந்தா வீட்டின் சமை யலறை கழிப்பறை இரண்டையும் சம்பட்டி கோடாரி கடப்பாறை ஜேசிபி வண்டி மூலம் இடித்து தள்ளியுள்ளனர். தடுக்கச் சென்ற காந்தாவை மீண்டும் கடுமையாக தாக்கி கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இந்த தகவல் அறிந்து தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் வேலு, மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினரும் காட்டேரி ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருமான கோவிந்தசாமி பாதிக்கப்பட்டவர்கள்,இடிக்கப்பட்ட வீட்டையும் பார்வையிட்டு சிங்காரப்பேட்டை காவல் நிலை யத்தில் இதுகுறித்து புகார் மனு அளித்தனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் சாதி ஆதிக்க நபர்களுக்கு உடந்தையாக செயல்பட்டு வருகின்றனர். இதனை கண்டித்தும், மாவட்ட ஆட்சியரும் மாவட்ட காவல் துறையும் தலை யிட்டு பாதிக்கப்பட்ட குறவன் இன காந்தா சங்கர் குடும்பத்தினருக்கு நீதி கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் சிங்காரப்பேட்டை பேருந்து நிலை யம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழ்நாடு குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலாளர் வேலு தலைமை தாங்கி னார்.மாநில பொதுச் செய லாளர் ஏ.வி.சண்முகம், தலை வர் வி.கே.தனிகாசலம், மார்க்சிஸ்ட் கட்சி செயற்குழு உறுப்பி னரும், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினருமான கோவிந்த சாமி,ஊத்தங்கரை மார்க்சிஸ்ட் கட்சி வட்ட செயலாளர் மகாலிங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தினர். விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ்,தலைவர் முருகேசன்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட தலைவர் ஆனந்தகுமார்,சேலம் மாவட்ட குறவன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத் தலைவர் விக்னேஷ்பார்த்திபன், மாவட்ட துணைச் செயலாளர் மஞ்சுநாதர் கலந்து கொண்டனர்.