districts

img

கல்குவாரி,கிரானைட் தொழிற்சலைகளை முறைபடுத்துக சிபிஎம் சூளகிரி மாநாடு தீர்மானம்

கிருஷ்ணகிரி, அக்.24-  கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி ஆரம்ப சுகாதார நிலை யத்தை வட்ட மருத்துவமனை யாக தரம் உயர்த்த வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  வட்ட மாநாடு கோரிக்கை விடுத்துள்ளது.  அக்.24 அன்று நடை பெற்ற மாநாட்டிற்கு முரு கேசன்,முருகன்,நாராயணப்பா ஆகியோர் தலைமை தாங்கினர். முருகன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார்.எம்.முருகேஷ் வரவேற்றார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.பிரகாஷ் துவக்க உரையாற்றினார். வட்டச் செய லாளர் எஸ்.முனியப்பா வேலை அறிக்கையை சமர்ப்பித்தார். மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுரேஷ் நிறைவுரையாற்றினார். நவீன் நன்றி கூறினார். வட்டக்குழு 9 பேர் கொண்ட சூளகிரி வட்ட குழுவிற்கு செயலாள ராக சி.முருகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீர்மானங்கள் கிரானைட் தொழிற்சாலைகளை முறைப்படுத்தி ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களை மீட்டிட வேண்டும்.குவாரிகளுக்கு செல்லும் லாரிகளால் சேதம் அடைந்துள்ள சாலைகள் அனைத்தையும் சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.