மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி தேர்தலில் 123ஆவது வட்டத்தில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.சரஸ்வதி வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினர்ப.செல்வசிங், மாநிலக்குழு உறுப்பினர் ஏ.பாக்கியம், தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.குமார், ம.சித்ரகலா உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி தேர்தலில் 98ஆவது வட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆ.பிரியதர்ஷிணி, 5,287 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தினார். வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அலுவலரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். தலைமை முகவர் சேரன் உடன் உள்ளார்.
திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் 41 வார்டில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பா.விமலா வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு வடசென்னைமாவட்டச்செயற்குழு உறுப்பினர் ஆர்.லோகநாதன் உடன் கூட்டணிகட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பெண்ணாடம் பேரூரட்சி 12ஆவது வார்டில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் விஸ்வநாதன்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் 28ஆவது வட்டத்தில் அதிமுக வேட்பாளர் கமலாவை தோற்கடித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் விஜயலட்சுமிக்கு கூட்டணி கட்சியினர் மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
சிதம்பரம் நகராட்சி 5வது வார்டில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் அதிகாரி வழங்கினார்.
பெரணமல்லூர் பேரூராட்சி 1ஆவது வார்டில் வெற்றி பெற்ற சிபிஎம் வேட்பாளர் கவுதம் முத்து