districts

img

கேசவ நகரில் பாலம் அமைக்கப்படும்: சிபிஎம் வேட்பாளர் வாக்குறுதி

திருவண்ணாமலை, பிப். 14- மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி நகராட்சி 21ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும்  வேட்பாளர் ந.ராதாகிருஷ்ணன் கேசவ நகர், சன்னதி புதுத் தெரு விரிவாக்கம் பகுதிகளில் வாக்குகள் கோரினார். அப்போது அங்கிருந்து  புது பேருந்து நிலையம் செல்வதற்கு பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், மழைநீர், கழிவுநீர் கால்வாய்கள் முறையாக பராமரிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இந்த பிரச்சாரத்தில் திமுக நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், அருள்மூர்த்தி, காளிதாஸ், எம்.சி.சந்திரன், சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர், நிர்வாகிகள் பாரி, சிவராமன், பெ.,அரிதாசு, மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி இரா.சரவணன், மாரிமுத்து, வட்டார நிர்வாகிகள் தங்கமணி, சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.