திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு வாக்கு கேட்டு புதனன்று (ஏப்,17) போரூர் பள்ளி வாசல் அருகே பிரச்சாரம் நடைபெற்றது. 150 வது வட்டம் காரம்பாக்கம் கிளை சார்பில் நடைபெற்ற இந்த பிரச்சாரத்தில் மதுரவாயல் பகுதிச் செயலாளர் வி.தாமஸ், கிளைச் செயலாளர் எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.