வடசென்னையில் கலாநிதி வீராசாமியை ஆதரித்து 200 மையங்களில் சிபிஎம் பிரச்சாரம்
சென்னை, ஏப். 8- வடசென்னை மக்களவைத் தொகுதி யில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 200 மையங்களில் பிரச்சாரம் நடைபெற்றது. பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல், தொழிலாளர் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றியது, துறைமுகங் களை அம்பானி, அதானிக்கு தாரை வார்ப்பது, நாட்டின் நவரத்தினங்கள் என போற்றப்படும் பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்குவது, அதிமுக மாநில உரிமைகளை விட்டுக் கொடுத்தது போன்ற பல்வேறு ஒன்றிய அரசின், அதிமுக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை எடுத்துக் கூறியும், மாற்று திட்டங்களை முன் வைத்தும் துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒலி பெருக்கி மூலமும் தினசரி பிரச்சாரம் செய்து வருகின்றனர். மேலும் தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள், தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒருபகுதியாக ஞாயிறன்று (ஏப்.7) திருவொற்றியூரில் 30க்கும் மேற்பட்ட மையங்கள், ஆர்.கே. நகரில் 20 மையங்கள், ராயபுரத்தில் 20 மையங்கள், பெரம்பூரில் 20க்கும் மேற்பட்ட மையங்கள், திருவிக நகர் 10 மையங்கள், கொளத்தூர் 10 மையங்கள், மணலி 10 மையங்கள், மாதவரம் - செங்குன்றம் 20 என மொத்தம் 200 மையங்க ளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர் ராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.கோடீஸ்வரி, ஆர்.கருணாநிதி, செல்வகுமாரி, எம்.ராஜ்குமார், வீ.ஆனந்தன், நித்தியராஜ், பகுதிச் செயலாளர்கள் எஸ்.கதிர்வேல், வெ.ரவிக் குமார், எஸ்.பவானி, அ.விஜகுமார், டி.பாபு, வி.கமலநாதன், பா.ஹேமாவதி, வி.செல்வ ராஜ், மாமன்ற உறுப்பினர் பா.விமலா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விஞ்ஞானப்பூர்வ ஊழலில் ஈடுபட்ட பாஜக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கு
செங்கல்பட்டு, ஏப்.8- செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கத்தில் காங்கிரஸ் இதர பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் சார்பில் சார்பில் இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பாஜ கட்சியினர் விஞ்ஞான ரீதியாக பல ஊழல்களை செய்துள்ளனர். அதன் மூலமாக ரூ.7.5லட்சம் கோடி ஊழல் நடந்துள்ளதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கணவர் கூறுகிறார். இதுதவிர, தேர்தல் பத்திரம் ஊழல் உள்ளிட்ட பல ஊழல்கள் நடந்துள்ளன.ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளை பணம் கடத்த பயன்படுத்தும் நிலை உள்ளது. இதை உறுதி படுத்தும் வகையில் தாம்பரம் ரயில் நிலையத்தில், திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்த மான ரூ. 4 கோடி பணம் பிடிபட்டுள்ளது. 2016ம் ஆண்டு கண்டெய்னர் லாரியில் கடத்த இருந்த ரூ.570கோடியை நாங்கள் தான் பிடித்து கொடுத்தோம். இந்த வழக்கு ஒன்றிய அரசின் சிபிஐ கையில் இருப்பதால், ஆண்டு பல கடந்த நிலையிலும் நடவடிக்கை இல்லை. ஆனால், தற்போது ரயிலில் கடத்த இருந்த பணத்தை பிடித்த வழக்கில் பாஜக தப்பிக்கவும் முடியாது. இந்தியா கூட்டணி யின் வெற்றியை பாஜகவினரால் தடுக்க முடியாது. மேலும், அடுத்து ஆட்சிக்கு வர போவது இந்தியா கூட்டணிதான். தவறிழை வர்கள் எல்லோரும் சிறை செல்வது நிச்சயம் இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் செங்கல்பட்டு தெற்கு மாவட்டத் தலைவர் சுந்தரமூர்த்தி, ஓபிசி மாநில பொதுச் செயலாளர் அப்துல் முனாப், திமுகவின் காஞ்சி தெற்கு மாவட்டச் செயலாளர் சுந்தர், செய்யூர் தொகுதி எம்எல்ஏ பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மெட்ரோ பயணிகளிடம் வருத்தம் தெரிவித்த நிர்வாகம்
சென்னை,ஏப்.8- சென்னை மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஏராளமான மக்கள் பயணம் செய்து வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக க்யுஆர் குறியீடு, வாட்ஸ்அப், பேடிஎம் ஆப், போன்பி போன்ற அனைத்து வகையான ஆன்லைன் முறைகளில் பயணச்சிட்டு விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திங்களன்று காலை செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெறும் வசதி தடைபட்டது. இதனால் பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் பெற்றுக் கொண்டு பயணத்தை மேற்கொண்டனர். இதையடுத்து, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப் பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. பயணிகள் செயலி மற்றும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நிர்வாகம் சிஎம்ஆர்எல்-ல் ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துவதாக தெரிவித்துள்ளது.
தொழில்நுட்ப பிரச்சாரத்தில் திருமாவளவன்
சிதம்பரம், ஏப். 8- சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மக்களை சந்தித்து தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக விசிக டிஜிட்டல் முறையில் அனைத்துதரப்பு வாக்காளர்களையும் சென்று சேரும் விதமாக க்யூ ஆர் கோடு மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் விசிக சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்களில் காணப்படும் கியூ ஆர் கோடை செல்போனில் பார்க்கும்போது திரையில் திருமாவளவன் தோன்றி, இந்த நாடாளுமன்றத் தேர்தலின் முக்கியத்துவம், மக்களிடம் தனக்கு ஏன் வாக்களிக்க வேண்டும், தனக்கும் தொகுதிக்கான உறவுகள் குறித்து பேசுகிறார். வேப்பூர் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது போக்குவரத்து துறைஅமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அங்கு ஒட்டப்பட்டிருந்த க்யூ ஆர் கோட்டை தங்களின் செல்போனில் ஸ்கேன் செய்து பரிசோதித்தனர். அப்போது திரையில் வேட்பாளர் திருமாவளவன் தோன்றி பிரச்சாரம் செய்தவுடன் தொண்டர்கள் ஆர்பரித்தனர். தொடர்ந்து போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கரும் தனது செல்போனில் இயக்கி காணொலி பார்த்து மகிழ்ந்தார். மேலும் இத்தொழில்நுட்பம் குறித்து திருமாவளவனிடம் கேட்டு அறிந்தார்.
பெண்ணிடம் செயின் பறிப்பு
சென்னை, ஏப். 8- ஓட்டேரி காவலர் குடியிருப்பு எம் பிளாக் பகுதியிில் வசிப்ப வர் சுரேஷ்பாபு. இவர் சென்னை பெருநகர காவல்துறை யின் கட்டுப்பாட்டு அறையில் தலைமைக் காவலராக பணி யாற்றுகிறார். இவரது மனைவி சுகாசினி (38), ஞாயிற்றுக்கிழமை ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சுகாசினி கழுத்தில் அணிந்திருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து சுகாசினி ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதிய வடிவமைப்பில் குளிர்சாதனங்கள்
சென்னை, ஏப். 8- நுகர்வோர் பொருட்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக திகழும் ஹேவெல்ஸ் இந்தியா நிறு வனத்தின் பிராண்டான லாயிட் தொழில்துறையில் முதல் முறையாக தனது புதிய டிசைனர் குளிர்சாத னங்களை (ஏசி) அறிமுகம் செய்துள்ளது. குளிர்சாதனங்களில் மூட் லைட்டிங் மற்றும் மாறக்கூடிய திசுப்படலம் போன்றவை புதிய அம்சங்கள் ஆகும். இந்த சாதனங்கள் உங்கள் வீட்டின் அழகிற்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் விளம்பர தூதர்களாக நடிகர் மகேஷ் பாபு மற்றும் நடிகை தமன்னா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.