districts

img

மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம் பிரச்சாரம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து நாடு தழுவிய மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக மறைமலைநகரில் மாவட்டக் குழு உறுப்பினர் பி.சண்முகம் தலைமையில் பிரச்சாரம் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், கே.சேஷாத்திரி, பகுதி குழு உறுப்பினர் சம்பத் உள்ளிட்ட பலர் பேசினர்.


மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மணலி அண்ணாசிலை அருகே பகுதிச் செயலாளர் டி.பாபு தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.ஜெயராமன், எஸ்.ராணி, பகுதிக்குழு உறுப்பினர்கள் எஸ்.முருகன், ஜி.சிட்டிபாபு, எஸ்.நீலவேணி, எஸ்.சந்திரசேகர் ஆகியோர் பேசினர். 


ஏழை எளிய மக்களை பாதிக்கும் ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் பெரம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், பகுதிச் செயலாளர் வி.செல்வராஜ், பகுதிக்குழு உறுப்பினர் பி.கிருஷ்ணன், கிளைச் செயலாளர் சி.சாமிநாதன் ஆகியோர் பேசினர். 


ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்போரூர் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் கே.லிங்கன் தலைமை தாங்கினார்.  மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், ஒன்றிய செயலாளர்  எம். செல்வம்,  ஒன்றிய குழு உறுப்பினர்கள்  எம்.விக்னேஷ்,  பி.விக்னேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.