districts

img

நாய்களுக்கு இரையாகும் சடலங்கள் பராமரிப்பின்றி சீரழிந்து வரும் மூலக்கொத்தளம் மயானம்

சென்னை,மே 31 - சுடுகாடு, இடுகாடு, சுடலை,  மசானம் என்றழைக்கப்படும் மயானம் இறந்து போன மனிதர்களின் இறுதி நித்திரை கொள்ளும் இடமாக விளங்குகிறது.   வாழும் காலத்தில் இயற்கைச் சூழல்களாலும் நோய், விபத்து, அகால  மரணத்தை சந்தித்தவர்களின் சங்கமம் தான் இந்த மயானங்கள். பூமிப்பந்தில் உயிரின் முடிவாக  கருதப்படும்  வலி இல்லாத மரணம் கூட  விரும்பத்தகாத சம்பவமாக உள்ளது. விசயத்திற்கு வருவோம்.. சென்னையில் மூலக்கொத்தளம் மயானம், கண்ணம்மாபேட்டை மயா னம், கிருஷ்ணாம்பேட்டை சுடுகாடு, ஓட்டேரிசுடுகாடு, கொளத்தூர் சுடுகாடு  என பகுதிவாரியாக பல சுடுகாடுகள் உள்ளன. குறிப்பாக சென்னை மாநக ராட்சி நிர்வாகத்திற்கு சொந்தமான மூலக்கொத்தளம் மயானம் முறை யான பராமரிப்பு இன்றி நாறிக் கொண்டு இருக்கிறது. இவற்றில் தமிழகத்திலேயே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது மூலக் கொத்தளம் மயானமாகும். சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த மூலக்கொத்தளத்தில்  மொழிப்போர் தியாகிகள் தாள முத்து நடராஜன் உள்ளிட்ட பல போராளி களின் நினைவிடங்கள் உள்ளன.  சுமார் 24 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த  மயானத்தில் அண்மையில் ஆறு அடி நீளம், மூன்று அடி அகலத்திற்கு கல்லறை கட்டுவதற்கு அனுமதி வழங் ்கப்பட்டது. ஆனால் அரசியல் பிரமுகர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தங்கள் செல்வாக்கிற்கு ஏற்ப சமாதியை வடிவமைத்துக் கொண்டனர்.

இந்நிலையில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் கஞ்சா விற்பனை மைய மாகவும் மது பிரியர்களின் மனமகிழ் மன்றம் ஆகவும் திகழ்ந்து வருகிறது . ஆதரவற்ற மற்றும் வறுமையின்  கோரப்பிடியில் சிக்கி இறந்தவர்களை யும் இங்கு தான் பல ஆண்டு காலமாக அடக்கம் செய்யப்படுகின்றன.  சொந்த பந்தங்களோடு கொண்டுவரப்படும் பிரேதங்களை இறுதிச்சடங்கு செய்யும் பணியாளர்களுக்கு ஒரு  தொகையை நன்கொடையாகவும்,  சம்பிரதாயமாகவும் கொடுப்பது வழக்கமாக இருக்கிறது. ஆனால் அனாதை பிணங்களால் இந்த வரு வாய் ஏற்பாடு இல்லாததால் ஆழம்  குறைவாக எடுக்கப்பட்டு புதைக்கப்படு கின்றன.  இதனால் அப்பகுதியில் உள்ள   தெருநாய்கள் பிணங்களை தோண்டி தின்னும் அவலம் உள்ளது.   ரத்தமும் சதையுமாக உள்ள பிரே தங்களின் கை, கால், தலை, குடல் உள்ளிட்ட உள்உறுப்புக்களை தெரு நாய் வெளியே இழுந்துவந்து உண்ணும் அகோரமான காட்சிகளை அப்பகுதி மக்கள் சர்வசாதாரணமாக பார்த்து வருகின்றனர்.  சகமனிதனின் உடல் மரணித்த பின்னரும் சுயமரியாதை இன்றி அருவருக்கத்தக்க நிலையில் அலைக்கழிக்கப்படுவது நியாயமா? இதுகுறித்து பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் அடையாளப்பூர்வமாக சில தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றனவே தவிர  நிரந்தர தீர்வு என்பது இதுநாள் வரை இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பிரசித்திபெற்ற இந்த மயானம் சில நேரங்களில் அரசியல்வாதிகளின்   சித்து விளையாட்டு மைதானமாக  மாறி வருகிறது. ஏழைகளுக்கு நல்லடக்கம் செய்வதற்கு கட்டணம்  இலவசம் என்று ஆட்சியாளர்கள் அவ்வப்போது அறிவித்தாலும் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. கொரோனா நோய்த்தொற்றால் இறந்த ஆயிரக்கணக்கான பிரேதங்கள்  இங்கு ஆழ புதைக்கப்பட்டுள்ளன. இருப்பி னும் தெருநாய்கள்  புதைக்கப்பட்ட பிணங்களைக் கூட  தோண்டி எடுத்து விடுவதாக  கூறப்படுகிறது. வாழும் காலத்தில் வறுமையின் பிடியிலும் நோயின் மடியிலும் வாழ்ந்த வர்கள் செத்த பிறகு நரமாமிசமாக மாறும் அவலம் இங்கு இதயத்தை கணக்கச் செய்கிறது என்கிறார். காட்பாடாவைச்சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர்.  இந்த விசாலமான மூலக்கொத் தளம் மயானத்தில் ஒரு பகுதி  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக குடிசை மாற்று வாரிய குடியிருப்பாக மாற்றப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் கழிவுநீர் இணைப்பு வழங்குவதில் ஏற்பட்ட நிர்வாக குளறுபடியால் அந்தப் பணியிலும்தொய்வு ஏற்பட்டு முழுமையடையாமல் உள்ளது.  

இந்த மயானத்தால் ஏற்படும் சுற்றுச் சூழல் பாதிப்பு  சாமானிய மக்களை யும் பாதித்துவருகிறது. அத்துமீறல்கள் நடைபெறும் இடங்களில் கேமிராக் களை பொருத்தி காவல்துறையினரின் கண்காணிப்பை பலப்படுத்தவேண்டும் ஆனால் சென்னை  மாநகராட்சியின் சுகாதாரத்துறை இதுகுறித்து அக்கறையில்லாமல் இருப்பது ஏனோ தெரியவில்லை என்கிறார் ராமதாஸ் நகர் பகுதி பெரியவர். சுகாதாரத்துறை அதிகாரி வேல்முருகனை தொடர்பு கொண்ட போது, மூலகொத்தளம் மயானத்தை சீரமைக்க சென்னை மாநகராட்சி ஆணையர், மேயர் உள்ளிட்ட அதிகாரி கள்  பலகட்ட முயற்சிகள் எடுத்து வருகிறார்கள். பொதுமக்கள் ஒத்துழைப்பு இல்லாததால் எங்களால் எதுவும் செய்யமுடியவில்லை. இந்த மயானத்திற்கு 4 நுழைவு வாயில்கள் உள்ளன. இவற்றின் வழியாக நுழையும் மர்மமனிதர்கள் சமூக விரோதச்செய லில் ஈடுபடுகின்றனர். இங்குள்ள 7  பணியாளர்களில் 3 பேர் மண்வெட் டியை கூட தூக்கமுடியாத உடல் தகுதியுடன் இருக்கின்றனர் என்றும் தனக்கு இதற்கு மேல் பேசுவதற்கு நேரம் இல்லை என நழுவினார். பிணங்களுக்கு கூட பாதுகாப் பில்லாத இந்த ஊரில் தப்பித்தவறி செத்துவிடக்கூடாது என்று பலர் இறுதி நாட்களில் எங்கேனும் சென்று சாகலாம் என்று கூறிய விநோதமும் உண்டு.  எனவே பெருநகர மாநகராட்சி நிர்வாகம் உரிய கவனம் செலுத்தி சென்னையில் உள்ள மயானங்களை முறையாக பராமரிக்க வேண்டும்.  - ம.மீ.ஜாபர்