districts

img

காகித விலை உயர்வை கட்டுப்படுத்துக அச்சக தொழில் புரிவோர் கோரிக்கை

சென்னை, மார்ச் 20 - காகிதம், கெமிக்கல் போன் மூலப் பொருட்க ளின் விலை உயர்வை கட்டுப் படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அச்சக தொழில்புரிவோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை அச்சக தொழில்புரிவோர் சங்கத்தின் முதலாம் ஆண்டு பேரவை ஞாயிறன்று (மார்ச் 20) சிந்தாதரிப்பேட்டையில் நடைபெற்றது. இந்தப் பேர வையில், அச்சக தொழிலில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை போக்க வேண்டும், தொழில் மேம்பாட்டிற்கு வங்கிகள் தடையின்றி கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டன. இந்தப் பேரவைக்கு சங்கத்தின் தலைவர தி.வீர சிங்கம் தலைமை தாங்கி னார். பொதுச் செயலாளர் எம். சையத்அலிகோயா, இணைச் செயலாளர் கே.மணிகண்டன், கவிஞர் சைதை ஜெ. உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் தலை வராக தி.வீரசிங்கம், பொதுச்  செயலாளராக எம்.சையத் அலிகோயா, பொருளா ளராக ஏ.ஜோசப்செல்வன் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.