நிரந்தர தன்மை வாய்ந்த பணிகளில் ஒப்பந்த முறை கூடாது, மோட்டார வாகன சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு சார்பில் 7 மையங்களில் இருந்து திருச்சி நோக்கி நடைபயணம் நடைபெறுகிறது. இதன் ஒருபகுதியாக எம்.தனலட்சுமி தலைமையிலான நடைபயண பிரச்சாரக்குழு மே 23 அன்று மத்திய சென்னையில் பிரச்சாரம் செய்தது. அப்போது குறளகம் அருகே வியாபாரிகள் சங்கம், அமைப்புசாரா சங்கங்கள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னதாக, கே.பி.பார்க்கில் பழரசம் கொடுத்து வரவேற்றனர்.