districts

சென்னை முக்கிய செய்திகள்

பச்சை நிற ஆவின்பால் தொடர்ந்து தட்டுப்பாடு
சென்னை,செப்.15- சென்னையில் தினமும் ஆவின் பால் 16 லட்சம் லிட்டர் விற்பனையாகிறது.  ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தா மற்றும் பசும்பால் என பல்வேறு வகைகளாக தரம் பிரித்து விநியோகிக்கப்படுகிறது. தனியார்  பாலைவிட ஆவின் பால் விலை குறைவாக  இருப்பதால் கடைகளில் உடனடியாக விற்பனை ஆகிவிடுகிறது. குறிப்பாக பச்சை  நிற கவரில் உள்ள பால் 4.5 விழுக்காடு கொழுப்புச் சத்துடன் வழங்கப்படுகிறது. இந்த பால் ஆவின் விற்பனை முகவர்களி டம் அரை லிட்டர் ரூ.22-க்கு கிடைக்கிறது. கடைகளில் ரூ.23-க்கு விற்கப்படுகிறது. ஆவினில் தயாரித்து விநியோகிக்கப்படும் மற்ற பால்களைவிட பச்சை நிற பால் விலை  மிகவும் குறைவாக இருப்பதாக பொது மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வரு கின்றனர்.  பச்சை பால் மட்டுமே அதிகளவு உற்பத்தி செய்யப்பட்டதால் மற்ற பால் தயாரிப்புகள் பாதிக்கக் கூடும் என்பதால் அனைத்து பால் பாக்கெட் வகைகளையும் சீராக சமமான அளவு விநியோகிக்க திட்ட மிட்டு அதற்கான நடவடிக்கையில் ஆவின்  நிர்வாகம் இறங்கி உள்ளது. அதன் ஒரு  பகுதியான பச்சை பால் பாக்கெட் உற்பத்தியை 10 விழுக்காடு  குறைத்து பசும்பால் உற்பத்தியை 10 விழுக்காடு அதிகரித்து சென்னையில் விநியோகம் செய்து வருகிறது. பசும்பால் பாக்கெட் விலை யும் பச்சை நிற பாக்கெட் விலையும் ஒன்றாக  உள்ளது. ஆனால் ஒரு சதவீதம் கொழுப்புச் சத்து பசும்பாலில் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த சில மாதங்களாக பச்சை நிறபால் தட்டுப்பாடாக இருந்த நிலை யில் வெள்ளியன்று 30 விழுக்காடு  பால்  விநியோகத்தை குறைத்துள்ளதாக  பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி தெரிவித்துள்ளார். எந்தவித முன் அறிவிப்பும் இல்லாமல் ஆவின் நிர்வாகம் பச்சை நிற பால் பாக்கெட் விநியோ கத்தை குறைத்திருப்பது பால் முகவர்க ளுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்து கிறது என தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியினர் 20 பேர் மீது வழக்குப் பதிவு


சென்னை, செப். 15- சென்னை வேப்பேரியில் உள்ள காவல்  ஆணையர் அலுவலகத்தில் வியாழக் கிழமை காலை தமிழர் முன்னேற்றப் படை  தலைவர் வீரலட்சுமி, சீமான் மற்றும் சாட்டை  துரைமுருகன் மீது புகார் அளிக்க வந்திருந்தார்.   அதே போல  நாம் தமிழர் கட்சியினர் சிலர்  வீரலட்சுமி மீது அளித்த புகாரில் காவல்துறை  இதுவரை நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்திருந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் சீமான் கட்சியைச் சேர்ந்த  அனைவரும் உள்ளே செல்ல அனுமதி மறுத்த தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திர மடைந்த அக்கட்சியினர் காவல் ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது காவல்துறையினர் கதவுகளை பூட்டி அவர்களை தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு சம்பவங்கள் அரங்கேற்றியது. உடனே நாம் தமிழர் கட்சியினர் வீரலட்சுமி எதிராக  தகாத வார்த்தையால் திட்டியபடி சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்ட  நாம் தமிழர் கட்சியின் மாவட்டச் செயலாளர் அய்யனார், நிர்வாகிகள் சசிக் குமார், மணி உள்ளிட்ட 20 பேர் மீது வேப்பேரி  காவல் துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ரிப்பன் மாளிகையில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது போல ஒத்திகை

சென்னை,செப்.15- சென்னையில் வெள்ளியன்று 7 இடங்க ளில் பாதுகாப்பு ஒத்திகை நடத்த முடிவு செய்யப்பட்டது. தேசிய பாதுகாப்பு படையினர், சென்னை மாநகர போலீசார் மற்றும் அதிகாரி கள் பங்கேற்ற இந்த ஒத்திகை நடைபெறும்  இடங்கள் மிகவும் ரசியமாக வைத்கப்பட்டி ருந்தது. அதேநேரத்தில் மாலையில்தான் ஒத்திகை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் காலையில் சென்னை மாநகராட்சி கட்டிடத்தில் பாது காப்பு ஒத்திகை நடத்தப்பட்டுள்ளது. வெடி  குண்டுகளை வெடிக்கச் செய்தும் பாதுகாப்பு  ஒத்திகை நடத்தப்படும் என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில் தான் மாநகராட்சி கட்டிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பது போன்று பாதுகாப்பு படையினர் ஒத்திகை நடத்தினர். இதற்காக பாதுகாப்பு படையினர் ஹெலிகாப்டரில் இறங்கி ஒத்திகை நடத்தியது குறிப்பிடத் தக்கது. இது போன்று மற்ற இடங்களிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இந்த ஒத்திகை செப்.15, 16, 17 என 3 நாட்கள் நடைபெறுகிறது.

எரிசாராயம் விற்ற கும்பல் கைது

செங்கல்பட்டு,செப்.15- மதுராந்தகம் அருகே உள்ள அய்யனார் கோவில் சந்திப்பில் கடந்த மாதம் எரிசாராயம் கடத்தி வந்த லாரியை  போலீசார் மடக்கி பிடித்தனர். அதில் 175 கேன்களில் இருந்த  மொத்த 6105 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.  இது தொடர்பாக லாரி டிரைவரான மேகவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதில் எரிசாரா யம் கடத்தல் தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி என மிகப்பெரிய  அளவில் நடைபெறுவது தெரிந்தது. மேலும் அவர் கொடுத்த  தகவலின்படி பட்டாபிராம் சேர்ந்த கிஷோர், சைதாப்பேட் டையை சேர்ந்த தனசேகரன் ஆகியோர் கைது செய்யப்பட்ட னர். போபாலில் இருந்து ஐதராபாத் வழியாக எரிசாராயத்தை  கொண்டு வந்து தமிழகம், கேரளா முழுவதும் சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எரிசாராய வழக்கில் தொடர்புடைய ஐதராபாத்தை சேர்ந்த  சுரேஷ், செங்கல்பட்டை சேர்ந்த தனசேகரன் உள்பட மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஐஸ்அவுசில் 5 பேரை முட்டித்தள்ளிய மாடு

சென்னை,செப்.15- சென்னை ஐஸ் அவுஸ் பகுதியில் பெசன்ட்  ரோட்டில் வியாழனன்று ஒரு மாடு கண்ணில் பட்டவர்களை முட்டி தள்ளியது. ஒருவர் பின் ஒரு வராக மோதி தள்ளிய தில் 5 பேர் பாதிக்கப்பட்ட னர். நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு ஒரு வழியாக அந்த மாட்டை மடக்கி பிடித்தனர். நாய் கடித்ததால் மாட்டிற்கு வெறிபிடித்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. பின்னர் கால்நடை மருத்து வர்கள் மூலம் பரி சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

வடிகால் பணிகளை மேற்கொள்ளாத  ஒப்பந்ததார்களுக்கு அபராதம்: மாநகராட்சி 

சென்னை, செப். 15- சென்னையில் முறையாக வடிகால்  பணிகளை மேற்கொள்ளாத ஒப்பந்ததார்க ளுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வடிகால் பணிகளை சரியாக மேற்கொள்ளாத ஒப்பந்ததார்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்த தாரர்கள் சிலர், வடிகாலில் வண்டல் வடிகட்டியை கட்டமைக்காமலும், சாலை  சீரமைப்பு பணிகளை நிறைவு செய்யாம லும் விட்டுவிடுவதாக புகார் எழுகிறது. எனவே, மழை நீர் வடிகால் பணிகளு டன், வடிகட்டி கட்டமைத்தல், மழைநீர்  சேகரிப்பு கட்டமைப்புகளை தரமாக  அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. அதேபோல், பணிகள் நிறைவு பெற்ற பின் அங்குள்ள கட்டுமான கழிவுகள் மற்றும் சகதிகளை கட்டாயம் அகற்ற வேண்டும் எனவும், பொதுமக்களுக்கு இடை யூறு ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பணிகள் அனைத்தையும் முடித்தால் மட்டுமே, ஒப்பந்த தொகை முழு மையாக விடுவிக்கப்படும். இல்லையெனில்,  தொகை நிறுத்தி வைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பணிகளை வரும்  30ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. வடிகால் பணிகளை முறையாக மேற்கொள்ளாத 5 ஒப்பந்ததார்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள் 

கள்ளக்குறிச்சி ஆட்சியர் கடும் எச்சரிக்கை

கள்ளக்குறிச்சி,செப்.15- பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அரசு அலுவலர்களை மிரட்டி மோசடியில் ஈடுபடும் போலி பத்திரிகையாளர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஷ்ரவன் குமார் கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். பத்திரிகையாளர் என்பவர் உண்மை நிகழ்வுகளையும், பொதுமக்களுக்கு பய னுள்ள தகவல்கள், பல்வேறு கோரிக்கை களை செய்திகளாக வெளியிடுவதுடன் அரசின் திட்டங்களை பொதுமக்களுக்கு சென்று சேர்த்திடும் வகையில் பெரும் பணியாற்றக் கூடியவர்கள்.  ஆனால், சமீப காலங்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் போலி பத்திரிகையாளர்களால் பல்வேறு கசப்பான சம்பவங்கள் நடைபெற்று வரு கிறது. இது மிகவும் வருத்தம் அளிக்கக் கூடியதாக உள்ளது. பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் சில போலிகள் தங்களுக்கு உயர் அலு வலர்கள் தெரியும் என பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்து விடுவதாகவும், பல்வேறு துறை உயர் அலுவலர்களை பணி செய்ய விடாமல் இடையூறு, அவ தூறு செய்திகள் வெளியிடுவேன் என வியாபாரிகளை மிரட்டுவதாகவும், ‘பிரஸ்’ என்று இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் பொய்யான ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபடுவதாகவும் தொடர்ந்து புகார் வந்து கொண்டிருக்கிறது.  இதுபோன்ற போலி பத்திரிகையாளர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், மாவட்ட ஆட்சியர், சில அரசு அலுவலகம், அனைத்து வட்டாட்சி யர் அலுவலகங்கள் முன்பு பத்திரிகை யாளர்கள் என்ற பெயரை பயன்படுத்தி சில போலி நிருபர்கள் போலியான அடை யாள அட்டைகளை பயன்படுத்தி, பொது மக்களை ஏமாற்றும் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.  அரசுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு உடந்தையாக செயல் படுவதும், கள்ளச்சாராயம் தொழிலில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு தொடர்பில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. அத்தையை நிருபர்களால் பாதிக்கப்பட்டோர் தகுந்த ஆதாரத்துடன் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் அனுப்பினால், தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். தகவல் அளிப்பவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்படும் என்று அறிக்கை ஒன்றில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தெரிவித்திருக்கிறார்.

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்,செப்.15- விழுப்புரம் மாவட் டத்தில் தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு வருமாறு:-  விழுப்புரம் தமிழ் வளர்ச்சிக்கு அரும்பாடு படும் ஆர்வலர்களை கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினை பெரு மைப்படுத்தி, ஊக்கப் படுத்தும் வகையில் தமிழ்ச் செம்மல் என்ற விருது கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப் பட்டு வருகிறது.  விழுப்புரம் மாவட் டத்தில் 2023 ஆம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிட மிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அல்லது விழுப்புரம் மாவட்ட அலு வலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம்.

டெங்கு தடுப்புக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்: ஆட்சியர்

விழுப்புரம்,செப்.15- விழுப்புரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ஆட்சியர் பழனி வேண்டுகோள் விடுத்துள்ளார்.  விழுப்புரம் தலைமை அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டுள் ளது. அந்த வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு உடல்நலம் விசாரித்தார். அப்போது, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்ததோடு, உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும்படி அறிவுறுத்தினார். சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் மரு. லட்சுமணன், தலைமை மருத்துவ அலுவலர் மரு. லதா உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

ஒடுகத்தூர் பேரூராட்சியில் ரூ. 25.30 கோடியில் குடிநீர் திட்டம்

வேலூர், செப். 15- ஒடுக்கத்தூர் பேரூராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வசதி அளிக்கும் வகையில் அரூ. 25.30 கோடியில் புதிதாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தேவையான சாலை, மின் விளக்கு, கழிவுநீர் கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் பேரூராட்சி மூலம் செய்யப்பட்டுள்ளது.  குடிநீர் தேவைக்காக அகரம் சேரி பாலாறு பகுதியில் இருந்து நேரடியாக குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது குழாய்கள் பதித்து பல ஆண்டுகளான தால் பேரூராட்சிக்கு சரிவர குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, பொது மக்கள் நலனுக்காக அம்ரூத் 2.0 திட்டத்தின் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதற்கு ரூ.25.30 கோடியில் புதிய கிணறு மற்றும் குழாய்கள் பதிக்கும் பணியை அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார் தொடங்கி வைத்தார். அப்போது, “இந்த பணியை விரைந்த முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்”என்றார். அதனைத் தொடர்ந்து, மேலரசம்பட்டு சாலையில் உத்திர காவிரி ஆற்றுக்கு நடுவே வண்ணாந்தாங்கல், அத்தி குப்பம் ஆகிய ஊராட்சிகளில் நபார்டு திட்டத்தின் கீழ் புதிதாக அமைய உள்ள பாலத்திற்கும் அடிக்கல் நாட்டினார். இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் மு.பாபு, பேரூராட்சி தலைவர் சத்தியாவதி, செயல் அலுவலர் ராமு, மேற்கு ஒன்றிய தலைவர் கஜேந்திரன், வண்ணாந்தாங்கல் ஊராட்சி மன்றத் தலைவர் சசிகுமார், பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ஓசோன் தினம் கடைபிடிப்பு

கிருஷ்ணகிரி, செப்.12- கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி யில், சுற்றுச்சூழல் மற்றும் தேசிய பசுமைப்படை மன்றங்களின் சார்பில் ஓசோன் தினம் கடை பிடிக்கப்பட்டது.  இதையொட்டி, ஒன்றிய அளவில் நடந்த மாண வர்களுக்கான கட்டுரை, ஓவியம், பேச்சுப் போட்டி கள் நடத்தப்பட்டது.  ஒவ்வொரு பள்ளியிலும் முதலிடம் பிடித்த மாண வர்களுக்கு 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரி வாகவும் நடத்தப்பட்டது. இதில் முதலிடம் பிடித்த மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் பங்கேற்றனர்.