விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டத்திற்கு உட்பட்ட கீழ்புத்துப்பட்டு இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான கருத்துக்கேட்புக்கூட்டம் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.மோகன், திண்டிவனம் சார் ஆட்சியர் எம்.பி.அமித், மரக்காணம் ஒன்றியக் குழு தலைவர் தயாளன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.