சென்னை, அக். 6- தீபாவளி போனசாக 5 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், 36வது வாரிய கூட்ட முடிவுகளை அரசாணையாக வெளியிட வேண்டும், ஓய்வூதிய தொகையை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழனன்று (அக்.6) தமிழகம் முழுவதும் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன் ஒருபகுதியாக சென்னை மாவட்டக்குழுக்கள் சார்பில் டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலக முன்பாக ஆர்ப் பாட்டம் நடத்தினர். கட்டுமான தொழிலாளர் சம்மேளனத்தின் மாநில பொது செயலாளர் டி.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை சிஐடியு மாநிலப் பொருளாளர் மாலதி சிட்டிபாபு துவங்கி வைத்தார். சம்மேளனத்தின் மாநில துணைத் தலைவர் ஆர்.சிங்காரவேலு, சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் பா.பால கிருஷ்ணன் (தென்சென்னை), சு.லெனின் சுந்தர் (வடசென்னை), கட்டுமான சங்க மாவட்ட நிர்வாகிகள் ஏ.நடராஜன், இ.மூர்த்தி, சுப்பிரமணி ம.உதய குமார், ஏழுமலை, லூர்துசாமி, நடராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் பேசினர்.
பொன்னேரி
பொன்னேரி நலவாரிய அலுவலகம் முன்பு கட்டுமான சங்க மாவட்ட தலைவர் எம்.நாகராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் கே.விஜயன், மாவட்ட பொருளாளர் வி.ஆர். லட்சுமணன், மாவட்ட துணைத் தலைவர் எம்.சி.சீனு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்டு மான சங்கத்தின் தலைவர் டி.கணேசன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் இ.எல்.சீனிவாசன், சிஐடியு மாவட்ட செய லாளர் கே.ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் ெஜ.ராபர்ட்எபிநேசர் ஆகியோர் பேசினர்.
செங்கல்பட்டு
செங்கல்பட்டில் மாவட்டத் தலைவர் செல்வகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்ரி, மாவட்டச் செயலாளர் கே.பகத்சிங் தாஸ், கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பாபு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் கலைச்செல்வி உள்ளிட்ட பலர் பேசினர்.