பூந்தமல்லி,மே 23- பூவிருந்தவல்லி ஊராட்சி ஒன்றியம், கருணாகரச்சேரி ஊராட்சியில் கூவம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பா லம் கட்டும் பணியை அமைச்சர் சா.மு. நாசர் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக திருவள்ளுர் மாவட்டம், பூவி ருந்தவல்லி ஊராட்சி ஒன்றி யம், கருணாகரச்சேரி ஊரா ட்சியில் அமுதூர்மேடு கிராமம் முதல் ராமாபுரம் சாலை வரை கூவம் ஆற்றின் குறுக்கே 7.5 மீட்டர் அக லமும், 83 மீ நீளத்திலும் ரூ 5.71 கோடி மதிப்பீட்டில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் முன்னிலையில் பால் வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் அடிக்கல் நாட்டி பணி களை துவக்கி வைத்தார். விழாவில், பூவிருந்த வல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேசிங்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ெஜயக் குமார், ஊரக வளர்ச்சி(ம) ஊராட்சித்துறை செயற் பொறியாளர் வி.ராஜவேல் பலர் கலந்து கொண்டனர்.