சென்னை, ஜன. 4 - சிறுபான்மை மாணவர்களின் ஆரம்ப, ஆராய்ச்சி கல்வி உதவித் தொகைகளை ஒன்றிய அரசு நிறுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாயன்று (ஜன.3) சென்னையில் தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு சார்பில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது
எஸ்.நூர்முகமது
இந்தக் கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் எஸ்.நூர்முகமது பேசு கையில், “கல்வியிலிருந்து ஒதுங்கி இருந்த சமூகத்தில், ஆண்களை விட பெண்கள் அதிகளவு கல்வி கற்க தொடங்கி விட்டனர். இதனை ஆர்எஸ்எஸ், பாஜக-வால் பொறுத்துக்கொள்ள முடிய வில்லை. மாணவிகளை கல்வி யிலிருந்து வெளியேற்ற `ஹிஜாப் விவகாரத்தை கையாண்டனர். அதற்கு நீதிமன்றமும் துணையாக இருந்தது. உதவித்தொகை இன்றி ஏழை மாணவர்களால் படிக்க இயலாது. ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலின் ஒருபகுதியாக இஸ்லா மிய மாணவர்களின் கல்வி உதவித்தொகையை நிறுத்தி யுள்ளனர்” என்றார். சிறுபான்மை மக்கள் தனிமைப் படாமல், மதச்சார்பற்ற சக்தி களோடு இணைந்து போராடி னால்தான் உரிமைகளை பாது காக்க முடியும்” என்றம் அவர் கூறினார்.
நவாஸ்கனி எம்.பி.,
ராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் எம்.நவாஸ்கனி எம்.பி., குறிப்பிடுகையில், “கார்ப்பரேட் டுகளுக்கு வட்டிச்சலுகை, கடன் தள்ளுபடி என அள்ளி கொடுக்கும் பாஜக அரசு, கல்விக்காக கிள்ளி கூட தர மறுக்கிறது என்றார்.
பேரா.ஜே.ஹாஜாகனி
தமுமுக பொதுச் செயலாளர் பேரா.ஜே.ஹாஜாகனி, “காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற முடியாத தால் கல்வியில் காவியை ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பாஜக அதி காரத்தில் இருக்கும் வரை இது போன்ற அநீதிகள் நிகழும்.” என்றார்.
ஆசிரியர் மேத்யூ
“தமது பள்ளியில் 2 இஸ்லாமிய மாணவர்களுக்கு தேசிய கல்வி உதவித்தொகையை பெற்றுத் தந்தேன். தற்போது பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது” என்று நடைமுறை அனுபவத்தை எடுத்துக்காட்டி பேசிய தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொருளாளர் மேத்யூ, “கல்வி உதவித்தொகை நிறுத்தியதையும், அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகளை உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்க கோரி பிப்ரவரி மாதம் திருச்சியில் மாநாட்டை நடத்த உள்ளோம்” என்றார்.
நிருபன் சக்ரவர்த்தி
இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் க.நிருபன் சக்ரவர்த்தி குறிப்பிடுகையில், “சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தப் பட்டதை கண்டித்து ஜன.9 அன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்த உள்ளதாக கூறினார்.
தொடர் இயக்கம்
கூட்டத்திற்கு தலைமை தாங்கி முன்னதாக பேசிய நலக்குழுவின் பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன், “கல்வி உதவித் தொகை பறிப்புக்கு எதிராக ஜனவரி 3வது வாரத்தில் துண்டு பிரசுர விநியோக இயக்கமும், 4வது வாரத்தில் மின்னஞ்சல் அனுப்பும் இயக்கமும், பிப்ரவரி மாதத்தில் தமிழகத்தின் 3 மையங்களில் ஆர்ப்பாட்டமும் நடைபெறும்” என்றார். இந்தக்கூட்டத்தில் பிஷப் தேவ சகாயம், பாரதி அண்ணா (தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம்), கல்வியாளர் பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு, ஜெ.பட் டாபி (சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கம்), ஆராய்ச்சி மாணவி சுசீந்திரா, எம்.ஜலாலு துன், சி.மார்டின் உள்ளிட்டோர் பேசி னர்.