districts

img

வருவாய் துறையினர் அத்துமீறல்: வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கம் கண்டனம்

வேலூர், ஏப். 13 - வேலூர் மாவட்டம் கணி யம்பாடி புதூர் கிராமத்தில் வசிக்கும் வேட்டைக்காரன் இன மக்களின் வாழ்வாதா ரத்தை அழிக்கும் வருவாய்  துறையினரின் அத்து மீறலைக் கண்டித்தும், தமிழ்நாடு வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேசை அடாவடித்தனமாக கைது செய்து புனையப்பட்ட பொய் வழக்கை வாபஸ் பெறக் கோரியும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலை வர் கே.சீனிவாசன் தலைமை  தாங்கினார். மாநிலச் செயலாளர் இ.கெங்காதுரை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தமிழ் நாடு மலைவாழ் மக்கள் மக்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.டில்லிபாபு ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். சிபிஎம் மாவட்டச் செய லாளர் எஸ்.தயாநிதி, ஆதிவாசிகள் உரிமை களுக்கான மேடையின் மத்தியக்குழு உறுப்பினர் ஏ.வி.சண்முகம், வேட்டைக் காரன் பழங்குடி மக்கள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் எம்.சேட்டு, விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ப.சக்தி வேல், மாவட்டச் செயலா ளர் கே.சாமிநாதன், துணைத்  தலைவர் ஜி.நரசிம்மன், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட அமைப்பாளர் சி.எஸ்.மகாலிங்கம், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் செ.ஏகலைவன், சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி ஆகியோரும் பேசி னர்.

இதில் வேட்டைக்காரன் பழங்குடி மக்கள் சங்க கிளை நிர்வாகிகள் கோவிந் தராஜ், முத்து, ஆனந்தன், ரஞ்சித்குமார், கணியம்பாடி புதூர் பகுதி சதீஷ், பிரகாஷ்,  ஏழுமலை, சிவா, கோபால்  உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதி யில் வருவாய் கோட்டாட்சி யரை பி.டில்லிபாபு தலை மையில் நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து பி.டில்லி பாபு கூறுகையில், கடந்த  40 வருடங்களாக புதூர்  கிராமத்தில் வேட்டைக் காரன் இனத்தைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கின்றனர். இவர்கள்  அந்தப்பகுதியில் உள்ள செங்கள் சூளையில் தினக் கூலிகளாக வேலை செய்து  பிழைப்பு நடத்தி வருகின்ற னர். இதில் 7 குடும்பத்தினர் கணியம்பாடி மேல்புதூர் ஏரி  பகுதியில் நீர் பிடிப்பு அற்ற  இடத்தில் 40 வருடங்களாக  சிறிய அளவில் செங்கல் சூளை அமைத்து தொழில் செய்து வருகிறார்கள். கடந்த 5 ஆம் தேதி வரு வாய்த் துறையினர், காவல்  துறையினர் உதவியுடன் அந்த செங்கல் சூளை களை இடிக்க ஜேசிபி எந்தி ரத்துடன் சென்றுள்ளனர். இதற்கு அந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அப்போது சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் மீது பொய் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் வருவாயத்துறையினர், காவல் துறையினரின் மிரட்ட லால் ஏற்பட்ட அச்சத் தினாலும், மன உளைச்சலா லும் கடந்த 9ஆம் தேதி இறந்துள்ளார்.

எந்தவிதமான மாற்று ஏற்பாடும் செய்யாமல் திடீரென்று காலிச் செய்யச் சொல்லி மிரட்டி, ஜேசிபி இயந்திரத்தைக் கொண்டு இடிக்க முற்படுவது அந்த மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் செயலாகும். எனவே வருவாய்துறை அதி காரிகள் இதுபோன்ற நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அந்த இடத்தை வகைமாற்றம் செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு அரசு கடனுதவி பெற்றுத்  தந்து தொழில் செய்ய நட வடிக்கை வேண்டும். மாவட்டச் செயலாளர், ரமேஷ் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்ப பெற வேண்டும். மறைந்த சங்கர் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், அதற்கு காரணமான வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர்  உள்ளிட்ட வருவாய் அதிகாரி கள், காவல்துறையினர் மீது  வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கூறி னார்.