districts

img

18 மாதமாக அகவிலைப்படி நிலுவை

புதுச்சேரி, அக்.12- 18 மாத அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும் என்று ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாநாடு ஒன்றிய மாநில அரசு களை வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தின் 6வது மாநாட்டிற்கு சங்கத்தின் பொறுப்பு தலைவர் என்.சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் ஆர்.நடராஜன் மாநாட்டு வேலை அறிக்கையை சமர்பித்தார். சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கே.ராகவேந்திரன் துவக்கி வைத்து பேசினார். சிஐடியு புதுச்சேரி  மாநில துணைத் தலைவர் என்.கொளஞ்சியப்பன், அரசு ஊழியர் சம்மேளன கவுரவத் தலைவர் பிரேமதாசன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் கவுரவத் தலைவராக ஆர்.நடராஜன், தலைவராக என்.சண்முகம், செயலாளராக கே. ராதா கிருஷ்ணன்,பொருளாளராக, மணிமேகலை நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். தீர்மானம் அனைத்து ஒன்றிய அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு 8வது ஊதியக் குழுவை அமைக்க வேண்டும். 1.4.2004 முதல் அமலாக்கப்படும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து,பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும். முடக்கி வைத்துள்ள 18 மாத அக விலைப்படி உடனடியாக வழங்க வேண்டும். புதுச்சேரி அரசு ஓய்வூதியர்களுக்கு பங்களிப்பு மருத்துவ சிகிச்சை வசதி திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில்  நிறைவேற்றப்பட்டது.