சென்னை, டிச. 31 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பம்மல்-அனகை பகுதிக்குழு முன்னாள் உறுப்பினர் தோழர் எஸ்.செல்வ சுந்தரம் படத் திறப்பு நிகழ்வு வியாழன்று (டிச.30) குரோம்பேட்டையில் நடைபெற்றது. பகுதிக்குழு உறுப்பினர் ஜி.விஜயலட்சுமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்தனர். பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.நரசிம்மன், எம்.தாமோதரன், மூத்த உறுப்பினர் பி.ஜீவா, பகுதிக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன் உள்ளிட்டோர் இரங்கல் உரையாற்றினர்.