தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் முன்னாள் தலைவர் எஸ்.பஞ்சரத்தினத்தின் 2ஆம் ஆண்டு நினைவு கல்வெட்டினை வெள்ளியன்று (செப்.22) பூவிருந்தவல்லி மின்வாரிய அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் எஸ்.கண்ணன் திறந்து வைத்தார். தென்சென்னை-1 திட்டத் தலைவர் வி.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், திட்டச் செயலாளர் டி.பண்டாரம்பிள்ளை, போரூர் கோட்டச் செயலாளர் எஸ்.பழனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.