சென்னை, ஜன.10- சென்னையில் இந்திய தொழிற்சங்க மையத்தை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய தோழர் பி.என்.உண்ணியின் உடல் தோழர்களின் கண்ணீர் அஞ்சலிக்கு இடையே புத னன்று (ஜன.10) அம்பத்தூ ரில் தகனம் செய்யப்பட்டது. தொழிற்சங்க முன்னோ டியாக அறியப்பட்ட தோழர் பி.என்.உண்ணி உடல்நலக்குறைவால் செவ்வாயன்று மதியம் காலமானார். அம்பத்தூர் மேட்டுத்தெருவில் உள்ளது அவரது இல்லத் தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு மூத்த தொழிற் சங்கத்தலைவர்கள் டி.கே.ரங்கராஜன், ஏ.கே. பத்மநாபன், அ.சவுந்தர ராசன், ப.செல்வசிங், வி.குமார், மாலதிசிட்டிபாபு, திருச்செல்வம், கோபி குமார், ஏ.கிருஷ்ணமூர்த்தி, துரைசாமி (ஏஐடியுசி), ஏ.எஸ்.குமார் (எல்டியூசி), எம்.ராமகிருஷ்ணன் (சிறுபான்மைநலக்குழு), கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் ராஜசேகர், பி.சுந்தரராஜன், மாவட்டச்செயலாளர்கள் எல்.சுந்தரராசன் (வடசென்னை), ஆர்.வேல் முருகன் (தென்சென்னை), ஜி.செல்வா (மத்தியச் சென்னை), கோபால் (திருவள்ளூர்), செங்கல் பட்டு செயற்குழு உறுப்பி னர் இ.சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், இரா.முரளி, சி.திருவேட்டை, பாக்கியம், பூபாலன், ஆர்.லோகு, எஸ்.ராணி, பாக்கி யம், கே.எஸ்.கார்தீஸ் குமார், எல்.பி. சரவணத் தமிழன், பகுதிச்செய லாளர்கள் கமலநாதன் (மாத வரம்-செங்குன்றம்), கோபி(அம்பத்தூர்), வி.செல்வராஜ் (திருவிக நகர்), பாபு(மணலி-சேக்காடு), ரவிக்குமார் (ஆர்கேநகர்),பவானி (ராய புரம்),ஏ.ஜான் (ஆவடி), கதிர்வேல் (கதிர்வேல்), விஜயகுமார்(பெரம்பூர்), ஹேமாவதி (கொளத்தூர்), பாலகிருஷ்ணன், லெனின் சுந்தர் (சிஐடியு, கவுன்சிலர் கள் ஆர்.ஜெயராமன், விமலா, டேப்லெட் இந்தியா தொழிற்சங்கம், அமைப்புசாரா, ஆட்டோ, திருவொற்றியூர், கிண்டி, அம்பத்தூர் தொழிற் பேட்டை பொதுத்தொழி லாள ர்சங்கம், வாலிபர், மாதர்சங்கம், கேரளசமா ஜம் உள்ளிட்ட பல அமைப்பு களின் தலைவர்கள், உறுப் பினர்கள் பங்கேற்றனர்.
டன்லப் மயானத்தில் சிஐடியு வடசென்னை மாவட்ட செயலாளர் எஸ்.கே. மகேந்திரன் தலை மையில் நடைபெற்ற அஞ் சலி கூட்டத்தில் சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநா பன் பேசுகையில், தொழிற் சங்கப்பணி செய்ததற்காக வெளியேற்றப்பட்ட தோழர் உண்ணி இயக்கத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றி னார். தொழிலாளர்களின் அக உணர்வுகளை புறச் சூழலால் ஈர்க்ககூடிய வல்லமை பெற்றிருந்தார் தோழர் உண்ணி. 1967 ஆண்டு தேர்தலும் 1968 ஆண்டு துவங்கிய போராட்டங்களும் அதன் தொடர்ச்சியாக 1970 ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து 1975 ஆம் ஆண்டு வரை சென்னை மாநகரம் தொழிலாளர்களின் போராட்டத்தால் கொந் தளிப்பு மிக்க நகரமாக இருந்தது. அதில் ஆவடி அம்பத்துர் திருவொற்றியூர் பகுதிகள் மிக முக்கியமான பகுதிகள். தொழிலாளி என்ற உணர்வு உள்ளே சென்று விட்டால் நடக்கக்கூடிய போராட்டங்களோடு தன்னை இணைத்துக் கொள்ளவேண்டும் என்று மனதை உந்தி தள்ளு கின்ற காலமாக இருந்தது. அக உணர்வுகளை புறச்சூழல்களால் மிகப் பெரிதாக்கி போராட்ட த்தின்பால் தள்ளுகின்ற உணர்வுபூர்வமான காலம் அது. அத்தகைய காலகட்டத்தில் நிர்வா கத்தால் பணியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் தன்னையே தொழிற்சங்க பணியில் உணர்வுபூர்வமாக ஈடுபடுத்திக் கொண்டவர் தோழர் உண்ணி. அத்தகைய உணர்வை தொழிற்சங்க பணியில் உள்ளவர்களும் வர்க்கப்போராட்டத்தை வலுப்படுத்த போராடும் தோழர்களும் சமுக மாற்றத் திற்காக போராடும் தோழர்களும் மனதில் கொள்ளவேண்டும். தோழர் உண்ணியின் போராட்ட செயல்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்த வர் வாழ்க்கை இணையர் கவுரிதேவி என்றால் மிகை யாகாது. தொழிலாளர் வர்க்கத்தின் நலனுக்காக வாழ்நாள் முழுவதும் போராடிய உண்ணியின் நோக்கங்களை வென்றெடுக்க அணி திரண்டு முன்னேறிச் செல்வோம் என்று ஏ.கே. பத்மநாபன் நினைவு கூர்ந்தார். இந்தகூட்டத்தில் ஏஐடியுசி மாநில நிர்வாகி துரைசாமி, இடது தொழிற் சங்க தலைவர் ஏ.எஸ்.குமார், சிஐடியு மாநில துணைப்பொது ச்செயலா ளர் குமார், சிபிஎம் வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தர ராஜன், சிஐடியு பகுதி செயலாளர் லெனின் சுந்தர் உள்ளிட்டோர் பேசினர்.