சென்னை, ஏப். 26 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரியமேடு கிளை உறுப்பினர் தோழர் பி.ராம மூர்த்தி வெள்ளியன்று (ஏப்.26) கால மானார். அவருக்கு வயது 65. கட்சியின் ஒன்றுப்பட்ட மேற்கு சென்னை பகுதிகுழு உறுப்பினராகவும், எழும்பூர் பகுதி க்குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர் தோழர் பி.ராமமூர்த்தி. பெரியமேடு பகுதி யில் போதைப் பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், நியாய விலைக்கடை, பொதுக்கழிப்பிடம் கொண்டு வர தொடர் போராட்டம், வழக்கு நடத்தி வெற்றி பெறு வதில் பெரும் பங்காற்றினார். எழும்பூர் பகுதியில் கட்சியை வளர்த்த முன்னோடி களில் ஒருவராக விளங்கினார். உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு ஓமந்தூரார் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், சிகிச்சை பல னின்றி காலமானார். அன்னாரது உடல் அஞ்சலிக்காக எண், 31,பேரக்ஸ் சாலை, பெரியமேடு, சென்னை-3 (பெரிய மேடு கால்நடை மருத்துவமனை எதிரில்) என்ற முக வரியில் வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் முன்னாள் மாநிலக்குழு உறுப் பினரும், மாதர் சங்க முன்னோடிகளில் ஒரு வருமான ஆர்.சரளாவின் கணவர் தோழர் பி.ராமமூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் பி.ராமமூர்த்தியின் உடலுக்கு கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், உ.வாசுகி, மூத்த தலைவர் அ.சவுந் தரராசன், மாவட்டச் செயலாளர்கள் ஜி.செல்வா (மத்திய சென்னை), எல்.சுந்தர்ராஜன் (வடசென்னை), ஆர்.வேல் முருகன் (தென்சென்னை), மாநிலக்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், எழும்பூர் பகுதிச் செயலாளர் கே.முருகன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்தி ரன், டி.கே.சண்முகம், ஆர்.ஜெயராமன், விஜயகுமார், லோகநாதன், பாக்கியம் (வட சென்னை), எஸ்.கே.முருகேஷ், இ.சர்வே சன், வே.ஆறுமுகம் (மத்திய சென்னை), ச.லெனின் (தென்சென்னை), பகுதிக்குழு உறுப்பினர்கள் ராஜாமணி, நாகராணி, ஆரோக்கியதாஸ், புகழேந்தி, பெரியமேடு கிளைச் செயலாளர் மனோகரன், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க அகில இந்திய செயலாளர் பி.சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் ஏ.ராதிகா உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தோழர் பி.ராமமூர்த்தியின் உடல் சனிக் கிழமையன்று (ஏப்.27) 10 மணி அளவில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, ஓட்டேரி மயானத்தில் இறுதி நிகழ்ச்சி நடை பெறும் என்று பெரியமேடு கட்சி நிர்வாகி கள் தெரிவித்தனர்.