districts

img

தோழர் பி.ராமலிங்கம் காலமானார்

சென்னை, செப். 9 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடி பி.ராம லிங்கம் காலமானார். அவருக்கு வயது 77. வடபழனி பணிமனையில் சிஐடியு-வை வளர்த்தெடுப்பதில், விருகம்பாக்கம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்ப்பதிலும் முன்னணி ஊழியராக செயல்பட்ட வர் தோழர் பி.ராமலிங்கம். இந்திரா நகர் குடியிருப்போர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டார். அன்னாரது உடல் 15/7, 4வது தெரு, இந்திரா நகர், விருகம்பாக்கம் விலாசத்தில் வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.லெனின்,  விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரங்கசாமி, தீ.சத்துரு, இந்திய மாணவர்  சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த்குமார், விருகம்பாக்கம் குடியிருப்போர் நலச் சங்கத்  தலைவர் செ.அருமை நாதன் உள்ளிட்டோர் அஞ்சலி  செலுத்தினர். அன்னாரது இறுதி நிகழ்ச்சி செவ்வாயன்று  (செப்.10) காலை 9 மணி அளவில் விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெறுகிறது.