சிபிஎம் திருவள்ளூர் மாவட்டக் குழுவின் சார்பில் தோழர்.என்.சங்கரய்யாவுக்கு வியாழனன்று (நவ 16), ஊர்வலமாக வந்து இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் எஸ்.கோபால் தலைமையில், மாநில கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.விஜயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.