districts

img

தோழர் என்.மோகன் படத்திறப்பு

செங்கல்பட்டு, ஜன.7- மறைந்த மூத்த தோழர் என்.மோகன் படத்திறப்பு நிகழ்ச்சியில் தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர். செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம் சூனாம்பேடு அடுத்த வில்லிப் பாக்கத்தைச் சேர்ந்தவர் தோழர் என்.மோகன். 1978ல் தன்னை மார்க்சிஸ்ட் கட்சி யில் இணைத்துக் கொண்டு செய்யூர் வட்டத்தில் கட்சியினை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர். ஒன்றுபட்ட காஞ்சி புரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டு மான தொழிலாளர்  சங்கத்தினை உருவாக்கு வதில் ஸ்தாபக தலைவராக செயல்பட்டவர். முறைசாரா சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாயத் தொழிலாளர்கள் சங்கம்  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் செய்யூர் வட்டத்தில் உருவாக காரணமாக இருந்த வர்.  உடல் நல குறைவு மற்றும் வயது மூப்பால் கடந்த டிசம்பர் 23 சூனாம்பேடு கிராமத்தில் இயற்கை ஏய்தினார். அவரது புகழஞ்சலி மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி சனியன்று மாலை சூனாம்பேட்டில் உள்ள அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் செய்யூர் வட்டச் செயலாளர் எஸ்.ரவி தலைமையில் நடைபெற்றது. தோழர் என்.மோகன் உருவ படத்தை கட்சியின் கட்டுப்பாட்டு குழு தலை வர் பி.சுந்தரராஜன் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா,  முன்னாள் மாவட்டச் செயலாளர் டி.கிருஷ்ண ராஜ், சிஐடியு மாநில துணைத் தலைவர் கே.விஜயன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர், மது ராந்தகம் வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, செய்யூர் முன்னாள் வட்டச் செயலாளர் எ.பாண்டியன், மதிமுக ஒன்றிய செயலாளர் காஞ்சி வி.சேகர், வன்னிய நல்லூர் கிராம நிர்வாக அலுவலர் ஜி.ஞானபிரகாசம் உள்ளிட்ட பலர் புகழஞ்சலி செலுத்தினர்.