districts

img

தோழர் மாரிமுத்து காலமானார்: தலைவர்கள் அஞ்சலி

கடலூர்,நவ.29- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருத்தாசலம் வட்ட குழு உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் வட்டப் பொருளாளருமான மாரிமுத்து காலமானார். அவருக்கு வயது 61.  தோழர் மாரிமுத்துவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஆலடி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது.கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஆர். ரவிச்சந்திரன், என்.எஸ். அசோகன்,  மாவட்டக் குழு உறுப்பினர் ஆர். கலைச்செல்வன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன்,  வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் கே.சின்னத்தம்பி, வட்டக்  குழு உறுப்பினர்கள் எஸ். ஜெயமணி, கே.செல்வகுமார், எம்.ஜே. நெல்சன், யு.சுந்தரவடிவேல், ஆர். கோவிந்தன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.