districts

img

தோழர் மஞ்சுளா காலமானார்

சென்னை, பிப்.23 - மார்க்சி ஸ்ட்கம்யூனி ஸ்ட்கட்சி உறுப்பினரும் திருவொற்றியூர் வி.பி.நகர் மாதர்சங்க முன்னாள் கிளை செயலாளருமான தோழர் க.மஞ்சுளா  காலமானார். அவருக்கு வயது 51, திருவொற்றியூர் மேற்கு பகுதியில் உள்ள வரதராஜபெருமாள் நகரில் மாதர்சங்க வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவரான தோழர் மஞ்சுளா நீண்டநாள் உடல்நலக்குறைவால் புதனன்று அதிகாலை (பிப் 23) காலமானார். சிபிஎம் வடசென்னை மாவட்டசெயற்குழு உறுப்பி னரான ஆர்.ஜெயராமனின் சகோதரர் கருணாநிதியின் துணைவியாராவார். விபிநகர் பகுதி மக்களின்  நலனுக்காக பல போராட்ட ங்களில் பங்கேற்றவர். அன்னாரது உடலுக்கு மாநில செயற்குழு உறுப்பினர் ப.செல்வசிங், வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந் தரராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், எம்.ராமகிருஷ்ணன், எஸ்.ராணி, விஜயகுமார், ஆர். லோகநாதன்,  கே.எஸ்.கார்தீ ஷ்குமார், எல்.பி.சரவணன், சி.திருவேட்டை (மத்திய சென்னை), பகுதிச்செயலா ளர் கதிர்வேல், 41ஆவது வட்ட கவுன்சிலர் பா.விமலா, எஸ்.பாக்கியம், கோட்டீஸ் வரி, பவானி, திருவொற்றி யூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் ஆகியோர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். புதனன்று பிற்பகல் எர்ணாவூர் மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.