districts

img

தோழர். என்.சங்கரய்யாவுக்கு கவிதாஞ்சலி, இசையஞ்சலி

செங்கல்பட்டு, நவ.24-. இந்திய சுதந்திர போராட்ட வீரரும் இந்தியாவில் கம்யூனிச இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான தோழர் என்.சங்கரய்யாவிற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் செங்கல்பட்டு மாவட்ட குழு சார்பில் வியாழனன்று (நவம்பர் 23) செங்கல்பட்டு இராட்டினங்கிணறு பகுதியில் மாவட்ட துணைச் செயலாளர் மு.முனிச்செல்வம் தலைமையில் கவிதாஞ்சலி, இசையஞ்சலி, புகழஞ்சலி* நடைபெற்றது. தமுஎகச-வின் மாநில பொருளாளர். சைதை ஜே, மாவட்ட தலைவர். இ.சங்கரதாஸ், மாவட்ட செயலாளர். கவிசேகர், மாவட்ட பொருளாளர்.என்.டி.அரங்கநாதன், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாவட்ட தலைவர். நா.வீரமணி ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். கவிஞர்கள். போந்தூர். கனகசுந்தரம், திரைப்பட கலை இணை இயக்குநர் மேத்யூ ஆகியோர்  கவிதைகளால் அஞ்சலி செலுத்தினர். பாடகர்கள்.கவி சேகர், சரண்யா ஆகியோர் சஞ்சய், சுனில் ஆகியோரின் பறை இசையோடு தங்கள் பாடல்களில் அஞ்சலி செலுத்தினர்.  மாவட்ட குழு உறுப்பினர். பி.வி.ராமமூர்த்தி நன்றி கூறினார்.