districts

img

தோழர் இ.பாலானந்தன் நூற்றாண்டு சிறப்பு கூட்டம்

காஞ்சிபுரம்,ஜன.28- சிஐடியு அகில இந்திய மூத்த தலைவர் தோழர் இ.பாலானந்தன் நூற்றாண்டு சிறப்பு கூட்டம் சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் ஞாயிறன்று காஞ்சிபுரத்தில் மாவட்டத் தலைவர் டி.ஸ்ரீதர், மாவட்ட துணைத் தலைவர் ஜெனிட்டன் ஆகி யோர் தலைமையில் நடை பெற்றது. “தொழிற்சங்க இயக்கம் நேற்றும்-இன்றும்” என்ற தலைப்பில் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் ஆர்.கருமலையான்,  “வேலைநிறுத்த போராட்ட அனுபவங்கள் மற்றும் சிஐ டியு முடிவுகள்” குறித்து  காஞ்சிபுரம் மாநில செய லாளர் இ.முத்துக்குமார், தோழர் இ.பாலானந்தனின் தியாக வரலாற்றை மாநில செயலாளர் கே.சி.கோபி குமார் ஆகியோர் பேசினார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 55 தொழிற் சங்கங்க ளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.