சென்னை, டிச. 12- இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 5 கிகி ஃப்ரீ ட்ரேட் எல்பிஜி சிலிண்டர்கள், சோட்டு என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டதன் ஓர் ஆண்டு நிறைவு விழாவில் பத்ம பூஷன் சுனில் கவாஸ்கர் கலந்து கொண்டார். நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம்.வைத்யாவால் கடந்த ஆண்டு டிசம்பரில் சோட்டு என்று பெயரிடப்பட்டது, இன்று நாட்டின் மிகவும் பிரபலமான எல்பிஜி பிராண்டுகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, பிராண்ட் பெயர் மாற்றியமைக்கப்பட்டதிலிருந்து சோட்டு சிலிண்டர் அபரிமிதமான வளர்ச்சியைக் (58.5ரூ) கண்டுள்ளது. நாடெங்கிலும் ஒவ்வொரு மாதமும் 2 லட்சம் ஃப்ரீ ட்ரேட் எல்பிஜி சிலிண்டர்களை விற்பனை செய்து வருகிறது. சோட்டுவின் முதல் ஆண்டு நிறைவில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்த சுனில் கவாஸ்கர், வரும் காலங்களில் ஒவ்வொரு வீட்டின் மதிப்புமிக்க இன்றியமையாத ஒன்றாக பரிணாமம் பெறும் என்றார்.
தலைவர் வைத்யா பேசுகையில், இந்திய சமையலறையில், சவுகரியம், பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் சின்னமாகத் திகழ்கிறது என்று குறிப்பிட்டார். சதீஷ் குமார் பேசுகையில், இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சோட்டு, இந்திய சமையலறைகளில் செயல்படும் என்றார். சோட்டு இன்டேன் எல்பிஜி நாடெங்கிலும் 20,000க்கும் மேற்பட்ட இடங்களில் கிடைக்கிறது. கிரானா ஸ்டோர்ஸ், சூப்பர் மார்க்கெட்கள் மற்றும் இந்தியன் ஆயில் விற்பனையகங்கள், எல்பிஜி விநியோகஸ்தர் ஆகிய பாயின்ட் ஆஃப் சேல்ஸ் இடங்களிலிருந்து, சோட்டு பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்கள் தங்கள் அடையாளச் சான்று சமர்ப்பித்து பெற்றுக் கொள்ளலாம். இது கையாள்வதற்கு எளிதானது. எடுத்துச் செல்வது பாதுகாப்பானது.