ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் கவுரவத் தலைவர் எஸ். இராமலிங்கத்தின் பணி நிறைவு பாராட்டு விழா புதனன்று (மார்ச் 27) நடைபெற்றது. இந்நிகழ்வில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம், தேர்தல் நிதி, நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக தலா 5 ஆயிரம் ரூபாயை இராமலிங்கம் குடும்பத்தினர் வழங்கினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடசென்னை மாவட்டச்செயலாளர் எல்.சுந்தரராஜன், சிஐடியு மத்திய சென்னை மாவட்டச்செயலாளர் சி.திருவேட்டை, வடசென்னை மாவட்டத்தலைவர் எஸ்.கே.மகேந்திரன், செயலாளர் லெனின் சுந்தர், ஐசிஎப் முதன்மை பர்சனல் அதிகாரி மோகன் ராஜா, ஐசிஎப் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைவர் சி.சத்தியமூர்த்தி, பொதுச்செயலாளர் பா.ராஜாராமன் உள்ளிட்டோர் பேசினர்.