திருவண்ணாமலை, மார்ச் 17- இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்ற தேர்தல், ஏப். 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார் களை விசாரித்து நடவடிக்கை எடுக்கவும், உரிய ஆவணங்களின்றி பொது மக்களால் கொண்டு செல்லும் ரூ.50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரொக்கப் பணம் மற்றும் ரூ.10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பிலான பரிசுப்பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் தலா மூன்று குழுக்கள் வீதம் 24 மணிநேரமும் 3 கட்டப் பணி மாற்று சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடும் வகை யில் பறக்கும்படை குழு மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளன. இந்திய தேர்தல் ஆணையத்தின் சட்டத் திற்கு புறம்பாக எந்தவொரு இடத்திலும் தேர்தல் நடத்தை விதிமீறல் கண்டறியப் பட்டால், அதுகுறித்து பொதுமக்கள் எளிதில் C-Vigil என்ற மொபைல் செயலி வழியாக காணொலி மற்றும் புகைப்படத்து டன் கூடிய புகாரினை தெரிவிக்கலாம். மேலும், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியல் அலுவலகத்தில், தேர்தல் பணிக்கென 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் அலுவலர்களை 1800 425 7047 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தங்களது புகார்களைத் தெரிவிக்கலாம். ஒரே நேரத்தில், ஒன்றுக்குமேற்பட்ட அழைப்புகளை ஏற்கும் வகையில் இக்கட்டணமில்லா தொலைபேசியுடன் கூடுதலாக 4 துணை இணைப்புகள் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.