சென்னை வண்ணாரப்பேட்டையில் ரவுண்டப் வாட்ஸ்அப் குழுவின் சார்பில் குறைதீர்ப்போம் நிகழ்ச்சி மூத்த பத்திரிகையாளர் ரமேஷ் தலைமையில் ஞாயிறன்று (ஏப் 3) நடைபெற்றது. இதில் ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி கலந்து கொண்டு சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டிய குறைகளை கேட்டறிந்தார். இதில் அகில இந்திய மீனவர் சங்க தலைவர் எம்.இ.ராஜா, வழக்கறிஞர்கள் ஆர்.எம்.டி. ரவீந்திரன் முருகவேல், எழுத்தாளர் கடலார் வேலாயுதம், தொழிலதிபர் காமராஜ், அண்ணா பூங்கா நடப்போர் நலச்சங்கச்செயலாளர் குணசேகரன், திமுக சட்ட திருத்த குழு உறுப்பினர் நா. மனோகரன், குழுவின் ஒருங்கிணைப்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.