districts

img

ஆளுநர் ரவி மீது எஸ்பி அலுவலகத்தில் புகார்

கடலூர்,ஜூன் 23-

    தமிழ்நாடு ஆளுநர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்யக் கோரி தமிழ் உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் புகார் செய்தனர்.

   கடலூர் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி, வடலூர் வள்ளலார் சபை பார்வையிட்டு தரிசனம் செய்தார். பின்னர் வள்ளலார் 200 வது ஜெயந்தி விழாவில் பேசினார். அப்போது, “சனாதனத்தில் உச்ச நட்சத்திரம் வடலூர் வள்ளலார்” என்றார்.

    ஆளுநர் ரவியின் இந்த கருத்துக்கு சமூக ஆர்வலர்களும் வள்ளலாரை பின்பற்றக்கூடிய சன்மார்க்க அன்பர்களும் கண்டனத்தை தெரிவித்து வருகின்ற னர்.

    இந்த நிலையில், கடலூர் மாவட்ட தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு சேர்ந்த வர்களும் ஆளுநருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

    சனாதனத்தை இறுதிவரை எதிர்த்து ஆன்மீக புரட்சியாளர் வடலூர் வள்ளலாரை அவமதிப்பு செய்துள்ளார். மேலும், சன்மார்க்க நெறியாளர்களை மனதை புண்படுத்தி இருக்கிறது. எனவே, ஆர்.என்.ரவி மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கக் வேண்டும் என்று தமிழ் உணர்வாளர்கள் கூட்ட மைப்பு சார்ந்த இள. புகழேந்தி, திரு மாரபன், சுப்புராயன், அகஸ்டின் பிர பாகரன், எஸ்.என்.கே ரவி, பாஸ்கரன்,  சந்திரசேகரன், உள்ளிட்டோர் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.