districts

சென்னை முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல் மாசற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்றத்திட்டம் ஆணையர் ராதாகிருஷ்ணன் தகவல்

சென்னை, நவ.25- சென்னை பெருமாநகராட்சியின் ஸ்மார்ட் கவர்னன்ஸ் சென்டர் இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் (ஐஜிபிசின்) பசுமை புதிய கட்டிட மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் மதிப்பு மிக்க விருதான பிளாட்டினம் சான்றிதழைப் பெற்றுள்ளது. பசுமையான சுற்றுச்சூழல் மாசு இல்லாத நிலையான எதிர்காலத்திற்கான சிறந்த அரசு கட்டிடத்தை கட்டி 100 மதிப்பெண்களுக்கு 89 மதிப்பெண்களை பெற்று சென்னை பெருமாநகராட்சி சிறந்த இடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருது மற்றும் சான்றிதழை சென்னை யில் நடைபெற்ற பசுமை காங்கிரஸ் மாநாட்டில்  இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தேசியத் தலைவர் குர்மித் சிங் அரோரா, தேசிய துணைத் தலைவர் பி. தியாக ராஜன், சென்னை மண்டல தலைவர் அஜித் குமார் சோர்டியா மற்றும் ஜான்சன் கன்ட்ரோல்ஸ் இந்தியா தலை வர் மற்றும் நிர்வாக இயக்குனர் அருண் அவஸ்தி ஆகி யோர் முன்னிலையில் சென்னை பெருமாநகராட்சி ஆணை யர் டாக்டர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டது.  இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்த இந்த மாநாட்டில் இந்த விருதைப் பெற்றுக் கொண்டு  ராதா கிருஷ்ணன் பேசுகையில்,  தமிழ்நாட்டின் மையப்பகுதியில், பசுமையான எதிர்காலத்தை வலியுறுத்தி, உலகின் பழமையான மற்றும் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி அமைப்புகளில் ஒன்றாக சென்னை பெருமாநகராட்சி திகழ்கிறது. பசுமை என்பதை வாய் அளவில் மட்டு மல்லாமல் செயலளவில், தமிழக மக்களுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத மற்றும் ஆரோக்கியமான இடங்களை ஏற்படுத்தித் தர வேண்டும், தமிழகத்தை சுற்றுச்சூழல் மாசற்ற மாநில உருவாக்க வேண்டும் என்பதில் நாங்கள் முனைப்புடன் செயலாற்றி வருகிறோம் என்றும் அவர் கூறினார்

பழங்குடியின பெண்ணிடம் ஆபாச பேச்சு விஏஓவை கைது செய்ய சிபிஎம் கோரிக்கை

விழுப்புரம்,நவ.25- விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட நல்லாபாளையம் கிராமத்தில் பட்டியலின பழங்குடி இருளர்  பெண்ணிடம் பாலின வன்புணர்ச்சி நோக்கத்தோடு பேசிய கிராம நிர்வாக அதிகாரியை உடனடியாக கைது செய்து, பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.டி.முருகன் விடுத்துள்ள அறிக்கையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட நல்லாபாளையம் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள்  வசித்து வருகின்றன.  இந்தப் பகுதிக்கு போக்குவரத்து வசதி இல்லை, மேலும் ரேஷன் பொருள் வாங்குவதற்கு 3கிமீ நடந்து செல்லவேண்டும், எந்தவிதமான அரசு  சலுகைகள் மற்றும் அடிப்படை வசதிகள் பெற முடியாத சிறிய தீவாக இந்த கிராமம்  உள்ளது. இந்நிலையில் பட்டிலின பழங்குடி இருளர் இன பெண் அய்யனார் மனைவி  சங்கீதா தனது கணவர் இறந்து விட்டதால்,  அவரது இறப்பு சான்றிதழ் வேண்டி நல்லாபாளையம்   கிராம நிர்வாக அதிகாரியி டம் கணவர் இறப்பு மற்றும் விதவை சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார். ஆனால்  அவரோ ஆயிரக்கணக்கில் லஞ்சம் கேட்பதும்,  செல்போன் மூலமாக பாலின,  சாதிய  வன்புணர்வோடு பேசி, அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். எனவே நல்லாபாளையம் கிராம நிர்வாக அதிகாரி மீது எஸ்சி எஸ்டி பிரிவின்  கீழ் வழக்கு பதிவு செய்து, உடனடியாக கைது செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் கடந்த 24-ந்தேதி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடப்பட்டது. அதனையடுத்து அந்த விஏஓ மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் வருவாய்துறை விஏஓவை  பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆனால்  அவரை கைது செய்யவில்லை,  உடனடியாக  அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும், மேலும் அந்த பாதிக்கப்பட்ட விதவை பெண்ணுக்கு கணவர் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை சான்றிதழ் வழங்கி அரசு உதவி தொகை மற்றும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக   மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஆர்டி.முருகன், காணை ஒன்றிய செயலாளர் பி.சிவராமன், கண்டாச்சிபுரம் வட்ட செயலாளர் எஸ்.கணபதி, நல்லா பாளையம் கிளைச் செயலாளர் முருகன் ஆகியோர் நேரில் சென்று சனிக்கிழமை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை  சந்தித்து பேசினர்.

இளநிலை உதவியாளர் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி, நவ 25- தொடக்க வேளாண்மைக்  கூட்டுறவு சங்கங்கள் மற்றும்  இதர கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் வங்கிகள்.கடன் சங்கங்களில் காலியாக வுள்ள இளநிலை உதவி யாளர். உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியுடைய வர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சி தலைவர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு நகர வங்கி, பணியாளர் கூட்டுறவு கடன் சங்கங்கள், கூட்டுறவு தொடக்க  வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டகசாலையில் காலியாக உள்ள  இளநிலை உதவியாளர், உதவியாளர் காலிப் பணியிடங் களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட ஏறுவாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்களிட மிருந்து http: / / WWW.drbkak.in என்ற இணையதளம் வழியாக (througn online only)  மட்டுமே எழுத்துத்தேர்வு 24.12.2023 காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தால் நடத்தப்படவுள்ளது. இதற்கான கல்வித்தகுதி ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Any Degree 10+2 மற்றும் any Degree முறையில்) மற்றும் கூட்டுறவு பயிற்சியாகும்.வைகுந்த்  மேத்தா தேசிய கூட்டுறவு நிறுவனம். புனே  வழங்கும் முதுநிலை வாணிப மேலாண்மை (கூட்டுறவு) பட்டம்  மற்றும் பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக் கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக் கடிதத்தால் வழங்கப் படும் கூட்டுறவில் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கள்ளக் குறிச்சி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (http: / /WWW.drbkak.in) வெளியிடப்பட்டுள்ளது என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் சிறுதானிய உணவு திருவிழா

திருப்பத்தூர், நவ.25- ஐ.நா.சபையால் 2023 ஆம் ஆண்டு சர்வேதச சிறு தானிய ஆண்டாக அறிவிக் கப்பட்டதை தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறுதானிய உணவுத்திருவிழா வரும் 29ஆம் தேதி நடைபெற வுள்ளது.  உடல் ஆரோக்கியத்தில் சிறுதானியங்களின் பங்கு  என்ற தலைப்பில் கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர்  தலைமையில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நவ.29  அன்று காலை 11   மணியளவில் கொண்டாடப் பட உள்ளது.   இந்த விழாவில் பொது மக்கள் அனைவரும் பங்கேற்று பயன்பெற்று சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார், மேற்படி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பான பங்களிப்பினை வழங்கிடும் அரசுத்துறைகள், சுய உதவிக்கு ழுக்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்புகள் மற்றும் குடி மக்கள் நுகர்வோர் மன்றங்கள் ஆகியவற்றிற்கு பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது.