districts

பொது இடத்தில் தீண்டாமை வேலி அகற்ற கோட்டாட்சியர் உத்தரவு

வேலூர். ஜூலை 9 –

    பொது இடத்தில் தீண்டாமை வேலி அமைத்தைத் தொடர்ந்து எழுந்த புகாரையடுத்து குடியாத்தம் கோட்டாட்சியர் நடத்திய அமைதி பேச்சுக்கு பிறகு வேலியை அகற்ற கோட்டாட்சியர் உத்தர விட்டார்.

    வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் மூன்றரை ஏக்கர் நிலத்தில் முருகன், கெங்கையம்மன், ஆஞ்சநேயர், முனீஸ்வரன் கோவில்கள், விளையாட்டு மைதானம், விவசாய நெற்களம், காரிய, மேடை குளம், குடி நீர் தொட்டி உள்ளிட்டவை அமைந்துள்ளது.  

   இந்த நிலையில், கடந்த மாதம் திடீரென்று தலித் மக்களை ஒதுக்கி வைத்து மற்ற பிரிவைச் சேர்ந்தவர்கள் ஒன்று சேர்ந்து அனைத்து கோயில்களையும் ஒருங்கிணைத்து இரும்பு கம்பி வேலியை அமைத்தனர். இந்த வேலி தான் பொது குடிநீர் தொட்டி மற்றும் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் மின்சார டிரான்ஸ்பார்மர், காரிய மேடை உள்ளது.

     இந்த இடத்தை ஒரு தரப்பு (தலித்) மக்கள் பயன்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தோடு அமைக்கப்பட்ட தீண்டாமை வேலி குறித்து  கெம்மங்குப்பம் மக்கள் காவல் துறை மற்றும் வட்டாட்சியரிடம் புகார் செய்தனர்.

     இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தலைமை யில் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் அரசுக்கு சொந்தமான இடத்தில் அரசின் உரிய அனுமதியின்றி தடுப்பு வேலியை அமைத்தது தவறு, அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரி வித்தனர். மேலும், பிரச்சனைக்குரிய இடத்தில் சட்ட விரோத செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினர். இதனை தீர்மானமாகவும் நிறைவேற்றினர். இதில், இரு தரப்பினரும் கையொப்பமிட்டனர்.