districts

img

வேலூர் நறுவீ மருத்துவமனையில் மயக்கவியல், கதிரியக்கவியல் முதுகலை கல்வி தொடக்கம்

வேலூர், மே 10- வேலூர் நறுவீ மருத்துவமனையில் மயக்கவியல் மற்றும் கதிரியக்கவியல் முதுகலை மருத்துவக் கல்வி துவக்கப்பட்டுள்ளது. எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள் நறுவீ மருத்துவமனையில் முது கலை மருத்துவ கல்வி பயில இந்திய மருத்துவ கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி யுள்ளது. அதன்படி நறுவீ மருத்துவ மனையில் மயக்கவியல் மற்றும் கதிரியக்கவியல் துறையில் டிஎன்பி எனப்படும் முதுகலை பட்ட மேற்படிப்பு இந்த கல்வி ஆண்டு முதல் தொடங்கப்படவுள்ளது. இந்திய மருத்துவக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசின் நிபுணர் குழுவினர் மருத்துவமனையில் மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதிகள்,

தேவையான உப கரணங்கள், மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் இதர அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்தது அதனடிப்படையில் அனுமதி வழங்கியுள்ளனர். இதை யடுத்து மயக்கவியல் மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம் ஆகிய வற்றில் டிஎன்பி எனப்படும் மூன்று ஆண்டு முதுகலை மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நீட் முதுகலை பட்ட மேற்படிப்பு தேர்வின் தரவரிசையின் அடிப்படை யில் இந்த இரு மருத்துவ படிப்பிலும் தலா இரண்டு மாணவர்கள் முதுகலை மருத்துவ கல்வி பயில இந்த ஆண்டு முதல் அனுமதிக்கப்படுவார்கள். நறுவீ மருத்துவமனையில் முது கலை மருத்துவ பட்ட மேற்படிப்பு தொடங்குவதற்கான ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கியுள்ள அனுமதி சான்றிதழை மருத்துவமனை மருத்துவ சேவைகள் தலைவர் டாக்டர் அரவிந்தன் நாயர் மருத்துவமனை தலைவர் முனைவர் ஜி.வி.சம்பத்திடம் வழங்கினார். அனுமதி சான்றிதழை பெற்றுக் கொண்ட தலைவர் சம்பத் இந்த அங்கீகாரத்திற்கு காரணமான மருத்து வர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். இதில் மருத்துவமனை செயல் இயக்குநர் பால் ஹென்றி, மருத்துவ கண்காணிப்பாளர் ஜேக்கப் ஜோஸ், ரத்த புற்றுநோய் சிகிச்சை நிபுணர் பத்மஸ்ரீ மேமன் சாண்டி, தலைமை பொது மருத்துவர் குரியன் தாமஸ், மயக்கவியல் துறை தலைமை மருத்துவர் சரவணன் அங்கிசெட்டி, கதிரியக்கவியல் துறை தலைமை மருத்துவர் அசோக் மித்ரா, தலைமை இயக்குதல் அலுவலர் மணிமாறன் மற்றும் பொது மேலாளர் நிதின் சம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.