districts

img

பெண் குழந்தைகளுடன் கலந்துரையாடிய ஆட்சியர்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் உலக  பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பெண் குழந்தைகளை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளி மாணவிகளுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் கலந்துரையாடும் ‘காபி வித் கலெக்டர்’ நிகழ்ச்சி வியாழனன்று (அக்.10) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பள்ளி மாணவிகளின் எதிர்காலம் குறித்து கலந்துரையாடினார். மேலும்,பள்ளி மாணவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.