கள்ளக்குறிச்சி அக்.13- கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் (தாட்கோ) மூலம் தூய்மை பணியாளர் குடும்பத்திற்கு நிவாரண தொகையை ஆட்சியர் ஷ்ரவன் குமார் வழங்கினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் சங்கராபுரம் வட்டம் மையனூர் கிராமத்தில் வசித்த கொளஞ்சி என்ற தூய்மை பணியாளர் 12.4.23 அன்று பணியின் போது விபத்தில் மரணமடைந்தார். இதைத் தொடர்ந்து அவருடைய குடும்பத்திற்கு தாட்கோ மூலம் நிவாரண தொகை ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை குடும்ப உறுப்பினர் தேவராஜ் என்பவரிடம் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும், 60 தூய்மை பணியாளர்களுக்கு தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரிய அடையாள அட்டைகளும் ஆட்சியர் மாவட்ட ஆட்சியர் வழங்கினார். அப்போது, தமிழ்நாடு அரசின் தூய்மை பணியாளர் நல வாரியத்தின் நன்மைகள், பயன்கள் குறித்து தூய்மை காவலர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தூய்மை பணியாளர் நல வாரிய மாநில உறுப்பினர் கண்ணன். மாவட்ட தாட்கோ மேலாளர் (பொ) தாட்சாயணி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.