கள்ளக்குறிச்சி, செப்.12- மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்தி பொருட்களை பெருமளவில் பயன்படுத்த கல்லூரி மாணவர்கள் முன்வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சி யர் வேண்டுகோள் விடுத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுக்க ளின் உற்பத்தி பொருட்களை பற்றி இளை ஞர்கள்-கல்லூரி மாணவர்கள் அறியும் வகையில் ‘கல்லூரி சந்தை’ என்ற நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “கல்லூரி சந்தைகளை நடத்துவதன் நோக்கம் பெண்களின் பொருளாதார மேம்பாடு தொடர்பான பிரச்சனைகளை இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வருமானம் ஈட்டும் நடவடிக்கைகள் மூலம் வறுமை ஒழிப்பின் பல்வேறு பரிமாணங்கள் பற்றிய பயனுள்ள நுண்ணறிவு வழங்கு வதாகும்”என்றார். இந்நிகழ்வில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன், கல்லூரி முதல்வர் மோகனசுந்தர், கல்லூரி செயலாளர் கோவிந்தராஜ்.கல்லூரி பேரா சிரியர் கல்லூரி மாணவர்கள், சய உதவி குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.