வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிவாரண நிதி வசூல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாநில செயலாளர் சித்தார்த்தன் நிதியளித்து துவக்கி வைத்தார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, மூசா, நகரச் செயலாளர் ராஜா, நகர்மன்றத் துணைத் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.