districts

img

தொடக்கப் பள்ளியில் இடிந்து விழுந்த கட்டிடம் தூண் மாணவர்கள் போராட்டம்

சென்னை,ஆக.21-

      சென்னை கே.கே.நகர் நெசப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. 3 மாடிகளுடன் இந்த  பள்ளி கட்டிடம் அமைந்துள்ளது. இப்பள்ளி யில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இந்த நிலையில் திங்க ளன்று பள்ளி கட்டிடத்தின் தூண் பல இடங்களில் உடைந்து விரிசல் ஏற்பட்டது.

     மேலும் உத்திரம் சிமெண்ட் பகுதியும் பெயர்ந்தது. சேதமடைந்த இந்த பள்ளி கட்டி டத்தை பார்த்து மாணவர்கள் அச்ச மடைந்தனர்.

     இந்த தகவல் அறிந்து பள்ளி முன் பெற் றோர்களும் குவிந்தனர். அதை தொடர்ந்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளியின் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். உடனடியாக பள்ளி  கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என  வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் 2 மணி நேரம் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து மாணவர், பெற்றோர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி கட்டிடம் விரைவில் சீரமைக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கை விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

      இந்த சம்பவத்தையொட்டி மாநகராட்சி பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “பள்ளி கட்டிடத்தின் நிலை படுமோசமாக உள்ளது. பள்ளி கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாக உள்ளது, மழைக்காலத்தில் விபத்துகள் ஏற்பட  வாய்ப்புள்ளது. இதனால் எங்கள் குழந்தை களை பள்ளிக்கு அனுப்ப பயமாக உள்ளது’  தற்போது பள்ளி கட்டிட தூண்கள் இடிந்து விழுந்து உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே இதுகுறித்து கல்வி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பள்ளியை சீரமைக்க வேண்டும்’ என்றனர்.

     இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.ஆனந்த் கூறுகையில், “மாநகராட்சி நிர்வாகம் பள்ளிக் கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதேசமயம், பழுதடைந்த கட்டிடங்களை சீரமைப்பதில், கட்டிடம், குடிநீர், கழிப்பிடம் போன்ற உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் போதிய கவனம் செலுத்துவதில்லை.

     நெசப்பாக்கம் தொடக்கப்பள்ளியை விரைந்து சீரமைக்க வேண்டும். அதேசமயம், மாநகராட்சி பள்ளிகளின் கட்டிடங்கள் முழுமையாக ஆய்வு செய்து, பழைய கட்டிடங்களை சீரமைக்கவும், புதிய வகுப்பறைகள் கட்டவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.