கோவை, ஏப்.6- இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட் டார். இந்தியா கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகு திக்கு உட்பட்ட பீளமேடு பகுதி கழ கம், சித்தாப்புதூர் பகுதியில் இருந்து பிரச்சாரத்தை துவக்கினார். தொடர்ந்து, அரிபுரம், சின்னசாமி நாயுடு சாலை, காந்திபுரம், அலமு நகர், பாலாஜி நகர், மட்டசாலை, செங் காடு, காந்தி மண்டபம், காய்க்கடை சந்திப்பு, பாப்பநாயக்கன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக சென்ற உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர், இந்த பகுதியை எனக்கு நன்கு தெரியும். நான் இங்கே வடக்கு மாமன்ற தலைவராக பணியாற்றிய காலம் முதற்கொண்டே, நன்கு அறிவேன். எதிரணியில் இருக்கக்கூ டிய வெளியூரைச் சேர்ந்த வேட்பா ளர்களுக்கு எல்லாம் அரிபுரம், சின்ன சாமி நாயுடு சாலை, காந்திபுரம் எல்லாம் தெரியாது. இந்தப் பகுதி மக்களின் பிரச்சினைகள் என்ன வென்று தெரியாது. அரிபுரம் பகுதியில் உள்ளவர்க ளுக்கு வீடுகள் வேண்டும் என்று கேட்டுள்ளீர்கள், அதற்கான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பட்டாவோ அல்லது வேறிடத்தில் வீடோ உங்களுக்கு ஏற்பாடு செய்வ தற்காக அமைச்சரிடம் பேசி நடவ டிக்கை மேற்கொள்ளப்படும். தேர் தல் முடிந்தவுடன் முழு வீச்சில் அதை செய்து கொடுப்போம் என வாக்கு றுதி அளித்தார். மேலும், பெங்களூரு போன்ற நகரங்களுக்கு கோவையில் இருந்து நேரடி ரயில் சேவைகள் கூடுதலாக இயக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஒன்றிய அரசு, இருப்ப தையும் பறிக்கும் நோக்கில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது இயக்கப்படும் பெங்களூரு - கோவை உதய் விரைவு ரயிலை பாலக்காடு வரை நீட்டிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. தொழில் நகரமான கோவைக்கான தேவையே அதிகம் இருக்கும் நிலையில், அந்த ரயிலை பாலக்காடு வரை நீட்டித் தால், கோவை மக்களுக்கு டிக்கெட் கிடைக்காத நிலை ஏற்படும். ஒரு தொழில் நகரத்துக்கு சரியான போக்குவரத்து வசதிகள் இருந்தால் மட்டுமே அது மென்மேலும் வளர்ச் சியடையும். ஆனால், ஒன்றிய அரசோ வளர்ச்சியை தடுக்கும் நோக்கிலே இருந்து வருகிறது. இப்படி இருந்தால் நாம் முன்னே றுவது எப்படி? இது கோவை மக்களுக்கு செய்யும் துரோகம் அல்லவா? இந்த துரோகிகளோடு கள்ளக் கூட்டணியில் இருக்கும் அதிமுக, கோவை நலனுக்காக ஏதா வது குரல் எழுப்பியதாக உங்களுக்கு நினைவிருக்கிறதா? எப்படி எழுப்பு வார்கள்? அவர்கள்தான் தங்கள் எஜமானர் மோடியிடம் கை கட்டி அடி மைகளாக நிற்கிறார்களே” என் றார். இந்த வாக்குசேகரிப்பின்போது, கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், பகுதி கழகச் செயலாளர் நாகராஜ், வார்டு செய லாளர் சசிக்குமார், மகளிரணி அமைப்பாளர் அன்னம்மாள், மற்றும் காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விடுதலை சிறுத்தைகள் கட்சி, திரா விடர் கழகம், உள்ளிட்ட இந்தியா கூட் டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர் கள் என பலர் இருந்தனர்.