districts

கடலோர பாதுகாப்பு ஒத்திகை

சென்னை,ஜூன் 29-

    மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு கடல் வழியாக புகுந்து பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடு கள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் 2 முறை ‘சாகர் கவாச் ஒத்திகை’ என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டு வருகிறது.  

   இதன்படி இந்த ஆண்டின் முதல் பாதுகாப்பு ஒத்திகை வியாழனன்று (ஜூன் 29) காலை 6 மணிக்கு தொடங்கியது. கடலோர பாதுகாப்பு படையினர், கடற்படை யினர், மாநில காவல் துறையினர் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகை நடத்தி வருகின்றனர். சென்னை முதல் குமரி வரை உள்ள 14 கடலோர  மாவட்டங்களிலும் ஒத்திகை நடைபெறுவதால் கடலோர பகுதிகள் பரபரப்பாக காணப்பட்டன.

    சென்னையில் மெரினா, பட்டினப்பாக்கம் கடலோர பகுதிகளில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். திருவொற்றியூர், எண்ணூர், கிழக்கு கடற்கரை சாலையையொட்டிய கடல் பகுதிகள் போன்ற வற்றிலும் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. கடலோர காவல்படை கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் மேற்பார் வையில் காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி மற்றும்  அதிகாரிகள் ஒத்திகையை நடத்தி வருகின்றனர். வியாழனன்று தொடங்கிய இந்த ஒத்திகை  இன்றும் நடத்தப்படுகிறது.