தமிழ்நாடு வங்கியை உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி வளாகத்தில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தினர் சங்கத்தின் கவுரவத் தலைவர் ஏ.நாராயணன் தலைமையில் தர்ணா நடத்தினர். தலைவர் மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சசிகுமார், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் இ.சர்வேசன், மாவட்ட தலைவர் துரைராஜ், பொருளாளர் தனசேகர், இணைச் செயலாளர் ஜெ.சீனிவாசன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.