districts

img

பொங்கலுக்கு மண் பானைகள் தயார்

சிதம்பரம், ஜன. 12- எவர்சில்வர், பித்தளை, அலுமினியம் பாத்திரங்கள் இருந்தாலும் தமிழர் திருநாள் பொங்கலுக்கு புதிய மண் பானையில் பொங்கலிட்டு கரும்புடன் கொண்டாடும் வழக்கம் ஆண்டாண்டு காலமாக உள்ளது. இந்த ஆண்டு வருகிற  15 ஆம் தேதி பொங்கல்  பண்டிகை கொண்டாடப்படு கிறது. இதையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மண் பானை தயாரிப்பில் மண்பாண்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதன் ஒரு பகுதி யாக சிதம்பரம் அருகே  குமாரமங்கலம் கிராமத்தில்  மண்பாண்ட தொழி லாளர்கள் பானைகளை தயார் பிரதான சாலையில் அடுக்கி வைத்துள்ளனர்.  இதுகுறித்து குமார்  மங்கலத்தைச் சேர்ந்த  மண்பாண்ட தொழிலாளர் கள் கூறுகையில், “சிதம்ப ரம் பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்தது. இதனால் சிதம்பரம் பகுதி யில் போதிய அளவு மண் கிடைக்கவில்லை. கடலூர், பண்ருட்டி பகுதிகளில் மண் எடுத்து வருவதால் அதிகமாக பணம் கொடுக்க வேண்டியுள்ளது. தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது ஒரு பானை ரூ. 100  முதல் ரூ. 150 வரை விற்பனை  செய்து வருகிறோம்” என்றனர்.