districts

img

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டப்பட்ட 25 பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டப்பட்ட 25 பள்ளிகளின் வகுப்பறை கட்டடங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2 ஊராட்சி செயலக கட்டிடங்கள் மற்றும் 3 ஊராட்சி மன்ற அலுவலக கட்டடங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாயன்று (டிச. 26) காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ச. வளர்மதி குத்துவிளக்கேற்றினார்.