கடலூர்,பிப்.13- 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க கோரி கடலூர் போக்குவரத்து பணிமனை முன்பு சிஐடியு சார்பில் செவ்வாயன்று (பிப்.13) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உச்ச நீதிமன்ற அறிவித்தபடி பண பலன்களை வழங்க வேண்டும், 2003 ஆம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மண்டல தலைவர் மணிகண்டன் தலைமை தாங்கினார். துணை பொது செயலாளர் ராமமூர்த்தி, கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு தலைவர் ஜி.பாஸ்கரன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். நிர்வாகிகள் நடராஜ், முத்துக்குமரன், அருள், பாலன், ராஜு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.