பெட்ரோலிய பொருட்கள். சுங்கக்கட்டணம், மருந்து பொருட்கள் ஆகியவற்றின் விலையேற்றத்தை கண்டித்து சனிக்கிழமையன்று (ஏப்.9) வில்லிவாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியு பகுதி ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி. இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் மிருதுளா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பகுதிச் செயலாளர் யூஜின்பர்க் மற்றும் பகுதிச் செயலாளர்கள் அன்பழகன் (சிபிஎம்). அப்துல் ரகுமான் (மமக) உள்ளிட்டோர் பேசினர்.